முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவால் காலியாக உள்ள கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் செப்டம்பர் 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெய்க் சி.தாமஸ் களமிறங்கியுள்ளார். செவ்வாயன்று ஜெய்க் சி.தாமஸை ஆதரித்து புதுப்பள்ளியில் மகளிர் மட்டும் பங்கேற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி துவக்கி வைத்து உரையாற்றினார். மத்தியகுழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி, கேரள அமைச்சர் ஆர்.பிந்து ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.