மேலும் அங்கு 4 அணு உலை கள் அமைக்கும் பணி கள் நடைபெற்று வரு கிறது. இதில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பதற்காக 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யா வில் இருந்து கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப் பட்டது.அங்கிருந்து 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கடந்த 8-ஆம் தேதி கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.கூடங்குளம் பகுதி யில் சென்றபோது மிதவை கப்ப லுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக் கப்பட்டது. இதனால் நீராவி ஜென ரேட்டர்களுடன் அலையில் இழுத்து செல்லப்பட்ட மிதவை கப்பல், கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் பாறை இடுக்கில் தரைதட்டியது. இதை யடுத்து அதனை மீட்பதற்காக சென்னையில் இருந்து வரவழைக் கப்பட்ட சிறப்பு குழுவினர் பல் வேறு முயற்சிகளை மேற்கொண்ட னர். எனினும் பலனளிக்கவில்லை. மேலும் பாறையில் மோதியதில் மிதவை கப்பல் சேதமடைந்ததால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து கடற்கரையில் இருந்து மிதவை கப்பல் வரையிலும் கட லுக்குள் சுமார் 300 மீட்டர் தூரத் துக்கு பாறாங்கற்கள், மண் கொட்டி இரவு பகலாக சாலை அமைத்த னர். தொடர்ந்து அந்த சாலை வழி யாக புதன்கிழமை மதியம் அதி நவீன ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய 128 டயர்களைக் கொண்ட ராட்சத லாரி மெதுவாக பயணித்து மிதவை கப்பலை சென்றடைந்தது. மிதவை கப்பலில் இருந்த 2 நீராவி ஜெனரேட்டர்களையும் ஒவ்வொன் றாக மீட்கும் பணி நடைபெற்றது. அதன்படி லாரியுடன் இணைக்கப் பட்ட டயர்கள் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் எந்திரமானது நீராவி ஜெனரேட்டரின் அடியில் சென்று, அதனை மெதுவாக தூக்கியது. தொடர்ந்து அதனை லாரி இழுத்த வாறு வெளியில் வந்தது. தொடர்ந்து மிதவை கப்பலில் இருந்த மற்றொரு நீராவி ஜென ரேட்டரையும் இரவில் மீட்டனர். மீட்பு பணிகளை கூடங்குளம் வளாக இயக்குனர் சுரேஷ் பார்வை யிட்டார். கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 19 நாட்க ளுக்கு பிறகு நீராவி ஜெனரேட் டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.