states

img

ராகுலின் நாடாளுமன்ற உரையிலிருந்து 24 வார்த்தைகளை நீக்கியது மோடி அரசு!

புதுதில்லி, ஆக. 10 - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மா னம் மீது புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பேசினார்.  அப்போது, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து மவுன மாக இருப்பதற்காக, பிரதமர் மோடி மீது, கடுமையான தாக்குதலை ராகுல் காந்தி தொடுத்தார். “மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்தவர்கள் பாஜக-வினர்” என்றும், “அவர்கள் (பாஜக- வினர்) தேசப்பற்றாளர்கள் அல்ல; தேச விரோதிகள்” என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், மக்களவை பதி வுகளில், மோடியை சரமாரியாகத் தாக்கும் ராகுல் காந்தி உரையின் சில பகுதிகளை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது.  சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா வின் இரண்டு மறைமுகக் குறிப்பு கள் உட்பட மொத்தம் 24 வார்த்தை கள், ராகுல் காந்தியின் உரையி லிருந்து நீக்கப்பட்டுள்ளன.

“முந்தைய கூட்டத்தொடரின் போது, நான் அதானியைக் குறிப்பிட்டுப் பேசியதால், உங்கள் மூத்த தலைவர் (பிரதமர் மோடி) வலிக்கு உள்ளாகியிருப்பார்” என்று  ராகுல் காந்தி கூறினார். அத்துடன், “அவரது (பிரதமர் மோடியின்) வலி, உங்கள் (சபாநாயகர்) மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவைப் பற்றிய இந்த இரண்டு வெளிப் படையான குறிப்புகளும் மக்களவை அவைக்குறிப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், மணிப்பூரில் மோடி இந்தியாவை ‘கொலை’ செய்து விட்டார் என்று குறிப்பிட்ட இடங்களி லும், ‘ஹத்யா’ (கொலை), ‘கட்ல்’  (கொலை) மற்றும் ‘கொலை’ ஆகிய வார்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளன. “நீங்கள் அந்தக் (இந்தியாவின்) குரலைக் கொன்று விட்டதன் மூலம், மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என்று அர்த்தம்; மணிப்பூர் மக்களை கொன்ற தன் மூலம் இந்தியாவை கொன்று  விட்டீர்கள்.. என ராகுல் காந்தி  சாடியிருந்த நிலையில், ‘தேசத்து ரோகி ’, ‘ஹத்யாரே (கொலை யாளி)’, ‘மாரா (கொல்லப்பட்டார்)’ ஆகிய வார்த்தைகளும் நீக்கப் பட்டுள்ளன.