states

img

ராஜஸ்தானில் பாஜவுக்கு காத்திருக்கும் படுதோல்வி!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ‘போல் டிராக்கர்’ என்ற அமைப்பு சார்பில் கருத்து கணிப்பு மேற் கொள்ளப்பட்டு உள்ளது. ஜூலை 1 அன்று துவங்கி செப்டம்பர் 5 வரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 25 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப் பட்ட நிலையில், அதன் முடிவுகளை போல் டிராக்கர் வெளியிட்டுள்ளது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறை யும் பாஜக தோல்வியையே சந்திக்கும்; காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப் பட்டுள்ளது. 200 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில், பெரும்பான்மைக்கு 101 இடங்கள் வேண்டும். ‘போல் டிராக்கர்’ நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 42.6 சதவிகித வாக்குகளுடன் 67 முதல் 86 இடங்களையே பெற வாய்ப்பு உள்ள தாகவும், அதேநேரத்தில் காங்கிரஸ் 46.2 சதவிகித வாக்குகளுடன் குறைந்தபட்சம் 108 இடங்கள் முதல் 124 இடங்கள் வரை பெற வாய்ப்பு இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் அல்லாதவர்கள், 11.2 சதவிகித வாக்குகளுடன், குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 12 இடங்களைப் பெறு வார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.