தெலுங்கானா சட்டமன்றத் தேர்த லில் சர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சிக்கு பைனா குலர் சின்னம் கிடைத் துள்ளது. ஆனால் அந்த சின்னத்திற்கு பதிலாக வேறு சின் னம் வேண்டும் என்று அக்கட்சி உடனடி யாக மேல்முறை யீடு செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ெஜகன்மோகனின் தங்கை சர்மிளா, தெலுங்கானா அரசி யலில் ஈடுபட்டுள்ளார். 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர் தல் நடைபெறுகிறது. ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி உள்ள நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை சர்மிளா ஆரம்பித்துள்ள ஒய்எஸ்ஆர் தெலுங் கானா கட்சியும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறது. தொடக்கத் தில் காங்கிரஸ் உடன் தனது கட்சியை இணைத்து தேர்தலில் களம் காண விரும் பிய சர்மிளா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் முதல்வர் பதவி யை கோரினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனித்து களமிறங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் தனித்து போட்டியிட தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டி ருந்தார். வியாழனன்று “பைனாகுலர்” சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனால் தெலுங்கானாவில் நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது.