states

img

கடவுளை அரசியலில் ஈடுபடுத்தாத ‘கடவுளின் சொந்த நாடு’ : பிரகாஷ் ராஜ்

திருவனந்தபுரம்,டிச.17- கடவுளை அரசியலில் ஈடுபடுத்த‚ கடவுளின் சொந்த நாடு‘ கேரளம் என்று 28ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்கே) நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் கூறினார். விழாவில் அவர் மேலும் பேசுகை யில், ஐஎப்எப்கே-யில் விருந்தின ராக வர அழைப்பு வந்ததும், அதை இரு கரம் நீட்டி ஏற்றுக்கொண்டேன். கேர ளம் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி யை உயிர்ப்புடன் நடத்தி வருகிறது. இங்குள்ள சிந்தனையாளர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும், இயக்குநர்களும் இதுவரை எந்த ஒரு கருத்தியலாலும் கறைபடுவதற்கு இடமளிக்கவில்லை என்பது பெருமைக்குரியது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது பல்வேறு கருத்துக்கள் மற்றும் விளக்கங்களால் ஆனது. நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல்வேறு கோணங்களில் எண்ணற்ற விளக்கங்கள் உள்ளன. நாடாளு மன்றத்தில் ஆறு இளைஞர்கள் போரா ட்டம் நடத்துவது குறித்தும், ஊடக வியலாளர்கள் கோமாளிகள் போல் செய்தி வெளியிடுவது குறித்தும் பல்வேறு வியாக்கியானங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் வேலையில்லாத் திண்டாட்ட த்துடன் போராடும் இளைஞர்களின் நிலைமை அல்லது மணிப்பூர் பிரச்சி னை குறித்து அத்தகைய விளக்கங் கள் அல்லது பதில்கள் எதுவும் இல்லை. நம் நாட்டில் டிஆர்பி அடிப்படையில் மட்டுமே விசயங்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற நேரத்தில் உலக சினிமாவை இளை ஞர்களிடம் கொண்டு சேர்க்கும் ஐஎப்எப்கே-இல் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.