states

img

மோடி ஆட்சியின் 9 ஆண்டுகளும் நாட்டில் பட்டினி அதிகரிப்பு

புதுதில்லி, அக். 13- 2023-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI), இந்தியா  இதுவரை இல்லாத அளவிற்கு மோச மான இடத்தைப் பெற்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட மொத்தம் 125 நாடுகளில், அண்டை  நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பின்தங்கி- 111 ஆவது இடத்தையே இந்தியா பிடித்துள்ளது.

கடந்தாண்டைக் காட்டிலும் நான்கு இடங்கள் சரிவு

2022-ஆம் ஆண்டிற்கான பட்டினிக் குறியீட்டில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 121 நாடுகளில் 107- ஆவது இடத்தை இந்தியா பெற்றிரு ந்தது. தற்போது அதனைக் காட்டிலும் 4 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern World wide)  அமைப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த  ‘வெல்ட் ஹங்கர் ஹில்ப்’ (Welt Hun ger Hilfe) அமைப்பும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக பட்டினிக் குறியீட்டை (Global Hunger  Index -GHI) வெளியிட்டு வருகின்றன.  5-வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள்  உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம்  இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு ஆகிய காரணிகளை அடிப்படை யாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையிலான ஆய்வுப் பட்டியலில்தான், இந்தியா 125 நாடுகளில் 28.7 புள்ளிகளை மட்டுமே பெற்று 111-ஆவது இடம் என்ற மோச மான நிலையில் உள்ளது. நடப்பாண்டு  பட்டியலில் அண்டை நாடுகளான இலங்கை 60-ஆவது இடம், நேபாளம் 69-ஆவது இடம், வங்கதேசம் 81-ஆவது இடம், பாகிஸ்தான் 102-ஆவது இடம் என இந்தியாவைக் காட்டிலும் முன்னேறிய நிலையில் உள்ளன.

58.1% இளம்பெண்களுக்கு இரத்தச் சோகை குறைபாடு

“இந்தியாவில் ஊட்டச்சத்து குறை பாடு 16.6 சதவிகிதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1 சதவிகிதமாகவும், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண் களில் இரத்தச் சோகை பாதிப்பு 58.1  சதவிகிதமாகவும் உள்ளது. மேலும்,  உலகிலேயே அதிகமான குழந்தை களை வீணடிக்கும் விகிதத்தில் இந்தியா 18.7 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதி பலிக்கிறது” என்று உலக பட்டினிக் குறியீட்டு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

மோடி ஆட்சிக்கு முன்பு 55-ஆவது இடத்திலிருந்த இந்தியா

இந்தியாவில் பட்டினிக் கொடுமை திடீரென அதிகரித்து விடவில்லை, மோடி தலைமையிலான பாஜக அரசு  ஆட்சிக்கு வந்த பின், கடந்த 7 ஆண்டு களாகவே மோசமான பட்டினி குறியீட்டில்தான் இந்தியா பயணித்து வருகிறது என்று உலகப் பட்டினிக் குறியீடு (Global  Hunger Index) அறிக்கை கடந்த 2021-ஆம் ஆண்டே அறிக்கையில் தெளிவுபடுத்தி இருந்தது.  ஏனெனில் மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு, 2011-இல் 67-ஆவது இடத்திலும் (122 நாடுகளில்) 2012 இல் 65-ஆவது இடத்திலும், (120 நாடு களில்) 2013-இல் 63-ஆவது இடத்தி லும் (120 நாடுகளில்), 2014-இல் 55-ஆவது இடத்திலும் (120 நாடுகளில்) இந்தியா இருந்தது.  இதுவே 2015-ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 80- ஆவது இடத்திற்குச் சென்ற இந்தியா (117 நாடுகளில்), 2016-இல் 97-ஆவது இடம் (118 நாடுகளில்), 2017-இல் 100- ஆவது இடம் (119 நாடு களில்), 2018-இல் 103-ஆவது இடம் (132 நாடுகளில்), 2019-இல் 102-ஆவது இடம் (117 நாடு களில்), 2020-இல் 94-ஆவது இடம் (107 நாடுகளில்), 2021-இல் 101-ஆவது இடம் (116 நாடுகளில்), 2022-இல்  107-ஆவது இடம் (121 நாடுகளில்) என்று மோசமான இடத்தை நோக்கி நகர்ந்து, தற்போது 111-ஆவது இடத்தை (125 நாடுகளில்) அடைந்துள்ளது. இதன்மூலம் மோடி ஆட்சியின் 9 ஆண்டுகளிலும் இந்தியா பட்டினிப் பாதையில் வேகமாக பயணிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.'

மோடி அரசு தொடர்ந்து மறுப்பு

ஆனால், உலகளாவிய பட்டினிக் குறியீட்டிற்கான ஆய்வுமுறை அறிவியல்பூர்வமற்றது என்று மோடி அரசு இந்த புள்ளிவிவரங்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த முறையும் “இந்த குறியீடு தவறான நோக்கத்தை காட்டுகிறது” மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் நான்கு அள வீடுகளில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய வை. அவை ஒட்டுமொத்த மக்கள் தொகையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருக்க முடியாது. நான்காவது மற்றும் மிக முக்கிய மான காரணம் 3,000 என்ற மிகச் சிறிய மாதிரி அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தி யாவின் ‘ஊட்டச்சத்து குறைபாடு களை’ பிரதிபலிக்காது. ஏப்ரல் 2023  முதல் போஷன் டிராக்கரில் பதி வேற்றப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அளவீட்டுத் தரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 2023 இல் 6.34 கோடியிலிருந்த அந்த எண்ணிக்கை, செப்டம்பரில் 7.24 கோடியாக அதிகரித்துள்ளது” என்றும் மோடி அரசு விளக்கம் அளித்துள்ளது.