states

img

ரூ.8.33 லட்சம் கோடி சகோதரிகளிடம் கொள்ளையடித்த மோடி

      ‘கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 417 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், மோடி அரசு இதனை கடந்த 9 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து ரூ. 1,110-க்கு உயர்த்தி விட்டது. அதாவது 2014 விற்கப்பட்ட விலையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக சிலிண்டரின் விலையை உயர்த்திவிட்டது.    

     மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடி ரூபாயை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் மக்களின் பாக்கெட்டில் இருந்து, 2017-இல் இருந்து 68 ஆயிரத்து 702 கோடியே 76 லட்சம் ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது.

      இதற்கு எதிராக பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக போராடியும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், சிலிண்டர் விலையை குறைக்காத மோடி அரசு, திடீரென 200 ரூபாயை குறைத்திருப்பது, இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தல் மீதான பயம்; குறிப்பாக ‘இந்தியா’ கூட்டணி உருவான பின்னணியில் அந்த பயம் உச்சகட்டத்தை எட்டியிருப்பதே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜக-வை விரட்டியடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்

     இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்குகள் குறையத்தொடங்கும் போது பரிசுப் பொருள்கள் விநியோகம் தொடங்கிவிடும். மக்கள் சிரமப்பட்டு உழைத்தப் பணத்தைக் கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற்போது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் போலியான அக்கறையை வெளிப்படுத்துகிறது. ரூ. 400-க்கு விற்பனையாகி வந்த சிலிண்டரை கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரூ. 1,100 வரை உயர்த்தி சாமானிய மக்களின் வாழ்க்கையை சீரழித்து வந்தார்கள். அப்போது ஏன் இந்தப் பாசப்பரிசு நினைவுக்கு வரவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  ரக்சா பந்தன் 10 ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறதா..?

    “100 மாத கொள்ளைக்குப் பிறகு ரூ.  200- தள்ளுபடி! பாஜக-வின் காலண்டரில் ஓணம் மற்றும் ரக்சா பந்தன் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும்  என்று தெரிகிறது. இதைச் செய்த பிறகும் மக்கள் எப்படி சிரிப்பார்கள்? இது மக்களுக்கு செய்யும் முழு துரோகம்” என்று சமாஜ்வாதி கட்சித் தலை வரும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த மாதமே கணித்த கல்வியாளர்

     “அவாத் ஓஜா, கல்வியாளர். அவர்  அகாடமியில் உலக வரலாற்றைக் கற்பிக்கிறார். கடந்த மாதம் அவர், “2024 தேர்தல் வருவதால், வரும் மாதங்களில் எல்பிஜி சிலிண்டர் மற்றும் எரிபொருளின் விலையை அரசாங்கம் குறைப்பதை நீங்கள் காண்பீர்கள்” என்றார். இன்று அரசாங்கம் எல்பிஜி சிலிண்டர் விலை  ரூ. 200 குறைத்துள்ளது. “அரசாங்கம் இப்படித்தான் மக்களை முட்டாளாக்குகிறது. பிரதமர் மோடி மீதான இந்த தாக்குதலுக்காக, அவர் (அவாத் ஓஜா) அனாகாடமியில் இருந்து நீக்கப்பட மாட்டார் என்று நம்புகிறேன்” என்று டாக்டர் நிமோ யாதவ் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை சிவசேனா (யுபிடி) மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் மறுபதிவிட்டு, மோடி அரசை விமர்சித்துள்ளார்.

‘இந்தியா’ கூட்டணியின் விளைவு

    “கடந்த இரண்டு மாதங்களில், இதுவரை, ‘இந்தியா’ கூட்டணியால் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தற்போது, எல்பிஜி விலை ரூ. 200  குறைக்கப்பட்டுள்ளது. இதுதான், ‘இந்தியா’வின் சக்தி” என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரி வித்துள்ளார்.

நெருக்கடியால் விலை குறைப்பு

    “இந்தியா கூட்டணியின் 2-ஆவது கூட்டம்  ஏற்படுத்திய அழுத்தம் காரணமாகவே ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. 3-ஆவது கூட்டத்தில் எல்லாம் முடிவானதும் எங்கள் கூட்டணியின் பலம் முழு வதும் தெரிய வரும்” என ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் துணை முதல்வரு மான தேஜஸ்வி கூறியுள்ளார்.