states

img

வீழ்ச்சி என்பதே பேச்சு!

சிஎம்ஐஇ ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை, செப்.1- இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2022 ஜூலையில் 6.80 சதவிகிதமாக இருந்தது,  ஆகஸ்ட் மாதத்தில் 8.28 சதவிகிதமாக அதி கரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் (Centre for Monitoring  Indian Economy - CMIE) தனியார் அமைப் பானது, மாதந்தோறும் நாட்டின் வேலை யின்மை குறித்த தரவுகளை வெளியிட்டு வரு கிறது. அந்த வகையில் முடிவடைந்த ஆகஸ்ட்  மாதத்திற்கான வேலையின்மை விவரங்க ளைத் தற்போது வெளியிட்டுள்ளது.   அதில், 2021-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தைப் போலவே, 2022 ஆகஸ்ட் மாதத்தி லும் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம்  8 சதவிகிதத்தை தாண்டி பதிவாகி யிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம்  8.28 சதவிகிதமாக இருந்தது. தனித்தனியாக  எடுத்துக் கொண்டால், நகரங்களில் 9.57 சத விகிதமாகவும், ஊரகப் பகுதிகளில் 7.68 சத விகிதமாகவும் வேலையின்மை இருந்துள் ளது என்று சிஎம்ஐஇ குறிப்பிட்டுள்ளது. இது ஜூலையில், நகர்ப்புற வேலை யின்மை 8.21 சதவிகிதமாகவும், ஊரக  வேலையின்மை விகிதம் 6.14 சதவிகிதம்  என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுமைக்கான இந்த வேலை யின்மை பிரச்சனையில், பாஜக ஆளும் ஹரி யானா மாநிலம், நாட்டிலேயே அதிகபட்ச மாக  37.3 சதவிகித வேலையின்மையுடன் முத லிடத்தில் உள்ளது. 32.8 சதவிகித வேலை யின்மையுடன் ஜம்மு - காஷ்மீரும், தலா 31.4 சதவிகித வேலையின்மையுடன் ராஜஸ்தா னும் முறையே இரண்டு மற்றும் மூன்றா வது இடங்களைப் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட் (17.3 சதவிகிதம்), திரிபுரா  (16.3 சதவிகிதம்), கோவா (13.7 சதவிகிதம்),  பீகார் (12.8 சதவிகிதம்) தில்லி (8.2 சதவிகி தம்), பஞ்சாப் (7.4 சதவிகிதம்), மேற்குவங் கம் (7.4 சதவிகிதம்), இமாச்சலப்பிரதேசம் (7.3 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் அடுத்த டுத்த இடங்களில் உள்ளன. தென்னிந்தியாவில் தமிழ்நாடு (7.2 சத விகிதம்), தெலுங்கானா (6.9 சதவிகிதம்), கேரளா (6.1 சதவிகிதம்), ஆந்திரப் பிரதேசம் (6 சதவிகிதம்), புதுச்சேரி (5.2 சதவிகி தம்), உத்தரப் பிரதேசம் (3.9 சதவிகிதம்) கர்  நாடகா (3.5 சதவிகிதம்) என வேலையின்மை விகிதத்தை கொண்டுள்ளன.

இந்த வரிசையில், குஜராத் (2.6 சத விகிதம்), மத்தியப் பிரதேசம் (2.6 சதவிகி தம்), ஒடிசா (2.6 சதவிகிதம்), மகாராஷ்டிரா  (2.2 சதவிகிதம்), மேகாலயா (2 சதவிகிதம்), சத்தீஸ்கர் (0.4 சதவிகிதம்)  மாநிலங்கள் குறைந்தபட்ச வேலையின்மையை பதிவு செய்துள்ளன. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படை யில், தமிழ்நாட்டில் வேலையின்மை விகி தம் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக சிஎம்ஐஇ கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து 5.3 சதவிகிதத்திற்குக் கீழாகவே வேலையின்மை இருந்தது. ஜூன் மாதத்தில் 2.1 சதவிகிதம் வரையில் சரிந்தது. இதன்  காரணமாக ஜூலை மாதத்தில், தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இந்த அளவீடு ஆகஸ்ட்  மாதத்தில் 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.

இதனிடையே, நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 2021-22 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 12.6 சத விகிதமாக இருந்த நிலையில், அது 2022-23 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 7.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று  தேசிய புள்ளியியல் அலுவலகம் (National  Statistical Office -NSO) அறிக்கை வெளி யிட்டுள்ளது.

ஜூலையில்  4.5% ஆக சரிவு!

அடிப்படைத் தொழிற்துறை வளர்ச்சி

புதுதில்லி, செப்.1- இந்தியாவின் அடிப்படைத் துறைகள் (Core Industries) எனப்படும் நிலக்கரி, சிமெண்ட், மின்சாரம், சுத்திகரிப்பு பொருட்  கள், உரங்கள், எஃகு மற்றும் இயற்கை எரி வாயு உள்ளிட்ட 8 முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சி 2022 ஜூலையில் 4.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. இது கடந்த 2021 ஜூலையில் 9.9 சதவிகி தம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், அது தற்போது சரிபாதியாக சரிந்  துள்ளது. 2022 ஜனவரியில் 4 சதவிகிதமாகவும், பிப்ர வரியில் 5.9 சதவிகிதமாகவும், மார்ச்சில் 4.8 சத விகிதமாகவும், ஏப்ரலில் 9.5 சதவிகிதமாகவும்  இருந்த அடிப்படைத் தொழிற்துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மே மாதத்தில் 19.3 சத விகிதமாகவும், ஜூன் மாதத்தில் 13.2 சதவிகித மாகவும் வளர்ச்சி கண்டிருந்தது. அந்த வகையில், 2022 ஜூலையில் 4.5 சத விகிதம் என்ற வளர்ச்சி, கடந்த 6 மாதங்களில்  இல்லாத மிகக் குறைந்த வளர்ச்சி அளவீடா கும். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதுதொடர்பான புள்ளிவிவ ரங்களை வெளியிட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுவைத் தவிர, மற்ற ஆறு தொழில்கள் 2022 ஜூலையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நிலக்கரி உற்பத்தி கடந்தாண்டை விட  2022 ஜூலையில் 11.4 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.  சுத்திகரிப்பு தயாரிப்புகள் 6.2 சத விகித வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதே போல உரத் துறை 6.2 சதவிகிதமும், எஃகு 5.7  சதவிகிதமும், சிமெண்ட் மற்றும் மின்சாரம் முறையே 2.1 சதவிகிதம் மற்றும் 2.2 சதவிகித மும் வளர்ச்சி அடைந்துள்ளன.

முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 13.5 சதவிகிதம்

நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை 20.5 சதவிகிதத்தை எட்டியது!

ள்ளியியல் அலுவல கம் (NSO) ஆகஸ்ட் 31 அன்று  வெளியிட்ட தற்காலிக மதிப்பீடு களின்படி, நடப்பு 2022-23 நிதி யாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையி லான முதல் காலாண்டில் இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு 13.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க விகிதத்தில் வளர்ச்சி காணும் என பெரும்பாலான நிபு ணர்கள் கணித்திருந்தனர். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சியை அளவிட உதவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு, நடப்பு 2022-23 நிதி யாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான காலாண்டில் 13 சதவிகி தம் உயரும் என தர மதிப்பீட்டு நிறு வனமான ‘இக்ரா’வும், 15.7 சதவிகி தம் அளவிற்கு உயரும் என பாரத  ஸ்டேட் வங்கியும் (SBI) கணித்தி ருந்தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், ரிசா்வ் வங்கியின்  பணக் கொள்கை கூட்டத்தின் போது நடப்பு நிதியாண்டின் முதல்  காலாண்டில் ஜிடிபி 16.2 சதவிகி தம் வளர்ச்சியடையும் என மதிப்பி டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இக்ரா, பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி ஆகிய வற்றின் கணிப்புகளைக் காட்டி லும் குறைவாகவே- ஆனால், இரட்டை இலக்கத்தில் ஜிடிபி வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டின் கடைசி 3 காலாண்டுகளில் பதி வான விகிதத்தைக் காட்டிலும், நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், 2021-22 நிதியாண்டின் முதல்  காலாண்டில் ஜிடிபி 20.1 சதவிகி தம் வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பி டத்தக்கது. இவை ஒருபுறமிருக்க, ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2022-23 நிதியாண்டின் நான்கு மாதங் களுக்கு உள்ளாகவே (ஜூலை இறுதியில்) ஆண்டு இலக்கில் 20.5 சதவிகிதத்தைத் தொட்டுள்ளதாக தலைமைக் கணக்கு அதிகாரி தெரிவித்துள்ளார். அதாவது, நடப்பு நிதி யாண்டின் ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில் செலவுக்கும் வரு வாய்க்கும் உள்ள வித்தியாசம் ரூ.  3 லட்சத்து 40 ஆயிரத்து 831 கோடி யாக உள்ளது. நிதிப்பற்றாக்குறை யை, சந்தையில் இருந்து அரசாங்  கம் வாங்கும் கடன்களின் பிரதி பலிப்பு என்றும் கூறலாம். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில், நிதிப்பற்றாக்குறை அதன் இலக்கில் 21.3 சதவிகி தத்தை எட்டியது குறிப்பிடத்தக் கது.