பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வுள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் அங்கு சூடுபிடித்துள் ளது. இந்நிலையில், அக்., 6 அன்று இந்தூ ரின் 5-ஆம் வார்டில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி கூட்டத்தில் மத்தியப்பிரதேச பாஜக தலைவர் விஜய் வர்ஹியா, “இந்த வார்டில் காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காமல் இருக்க அனைத்து வாக்குகளையும் பாஜகவிற்கு அளிக்க வேலை செய்ய வேண்டும். எந்தச் சாவடியில் காங்கிரஸுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லையோ, அந்த வாக்குச் சாவடியின் தலைவருக்கு 51 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங் கப்படும்” என கூறினார். விஜய் வர்கியா வின் இந்த பேச்சு ஊழல் நடைமுறைகள் குற்றமாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன் பிரிவு 123ஐ மீறுவதாக வும் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் சிபிஜே (நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் இயக்கம்) புகார் அளித்துள்ளது.