states

img

தில்லியில் சேமிப்பு கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி  

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.  

தில்லியின் புறநகர் பகுதியான அலிப்பூரில் கட்டுமான பணிகள் நிறைவு பெறாத கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரில் இதுவரை 4 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.    

கட்டுமானத்தில் உள்ள கிடங்கின் சுமார் 100 அடி நீளமும் 15 அடி உயரமும் கொண்ட சுவர் இடிந்து விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சேமிப்புக் கிடங்கு 5000 சதுர அடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.