ஹைதராபாத், அக். 27 - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை பாஜக வழக்கமாக கொண்டிருக்கிறது. உத்தர கண்ட், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பாஜக குதிரைப்பேரம் நடத்திய மாநிலங் களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் தான், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள தெலுங்கானா மாநி லத்தில் பாஜக இப்போதே குதிரை பேரத்தை ஆரம்பித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்ஏ-க்களை பாஜக-வுக்கு இழுக்க ரூ. 300 கோடி வரை பேரம் பேசியதாக 3 பேர் கையும் களவுமாக பிடிபட் டுள்ளனர். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ரோஹித் ரெட்டி, பீரம் ஹர்ஷ் வர்தன் ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ் வாலா பல்ராஜ் ஆகியோரை யே விலைக்கு வாங்கும் முயற்சி நடந்துள்ளது.
இதுதொடர்பாக சைபரா பாத் போலீசாருக்கு எம்எல்ஏக் களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், தந்தூர் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டியின் அஜீஸ் நகர் பண்ணை வீட்டில் புதனன்று மாலை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்ற ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த சாமியார் ராம் சந்திர பாரதி என்ற சதீஷ் சர்மா (33), திருப்பதியைச் சேர்ந்த சாமியார் சிம்ஹயாஜி என்ற டி.வி. ரமணா ராவ் (45) மற் றும் தொழிலதிபர் நந்தகுமார் (48) ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்கள், எம்எல்ஏக்களை வளைக்க, முக்கிய நபருக்கு ரூ. 100 கோடியும், ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் ரூ. 50 கோடி யும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பேரம் நடத்தி யுள்ளனர். இவர்களைக் கைது செய்த போலீசார், இந்த 3 பேரும், ஹைதரா பாத்திற்கு போலி அடையா ளத்தில் வந்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். கைதானவர்கள் எந்தக் கட்சிக்காக இந்த பேரத்தை நடத்தினார்கள் என்ற விவ ரங்களை போலீசார் வெளி யிடவில்லை. எனினும், தெலுங் கானாவில் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் தங்கள் கட்சி எம்எல்ஏக் களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக டிஆர்எஸ் குற்றம் சாட்டியுள் ளது.