திருவனந்தபுரம், பிப்.21- கடன் தொல்லை காரணமாக விஷவாயு செலுத்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்காக ஆன் லைனில் விஷ வாயுக்கான பொருட்களை அவர்கள் வாங்கியது காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சந்தப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் (41). இவரது மனைவி அபீரா (34). இவர்களது மகள்கள் அஸ்ரா பாத்திமா (14) மற்றும் அனோம் நிஷா பாத்திமா (8). ஆஷிக் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று நீண்ட நேரமாக இவர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து ஆஷிக்கின் பெற்றோர் மேல் மாடிக்கு சென்று பார்த்தபோது அறைக் கதவு பூட்டப் பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது, நான்கு பேரும் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சூர் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் விரைந்து சென்று நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், நான்கு பேரும் விஷவாயு சுவாசித்திருந்தது தெரியவந்தது. இதற்காக ஆஷிக் ஆன்லைனில் கால்சியம் கார்பனேட் மற்றும் சிங்க் ஆக்சைடை வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறைக்கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டி பின்னர் விஷ வாயுவை செலுத்தி அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள னர். விஷ வாயு வெளியேறாமல் இருப்ப தற்காக அறையின் ஜன்னல் மற்றும் கதவு களில் டேப்பை பயன்படுத்தி ஒட்டி வைக்கப் பட்டிருந்தது. ஆஷிக்குக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.