புதுதில்லி, செப். 5 - ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவை ஒன்றிய பாஜக அரசு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் 20-க்கும் அதிக மான வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகள் அனை த்தையும் ஒரே வழக்காக எடுத்துக் கொண்டு, தலை மை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அட ங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசா ரணை நடத்தி வந்தது. கடந்த 16 நாட்களாக வாதப் பிரதி வாதங்களைக் கேட்டது. விசாரணையின் நிறை வில், மனுதாரர்களில் ஒருவ ரான தேசிய மாநாட்டு கட்சி யின் எம்.பி. முகமது அக்பர், செவ்வாயன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதன்மூலம் அனைத்து தரப்பு விசாரணையும் முடி வடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் 5 நீதி பதிகள் அடங்கிய அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.