குஜராத் மாநில சட்ட மன்றத்தில் தற்போது பட் ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. இக்கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல்,” மாநிலத்தில் கல்வித்துறை மிக மோசமாக உள்ளது. தொடக்க பள்ளி கள் பெரும்பாலும் ஒரே ஒரு அறை யிலேயே இயங்கி வருகின்றன. இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பினார். இதற்கு மாநில கல்வி அமைச்சர் குபேர் திந்தோர் அளித்த பதிலில், “டிசம்பர் 31, 2023 நிலவரப்படி மாநி லத்தில் 341 அரசு தொடக்கப் பள்ளிகள் ஒரே அறையில் இயங்கி வரு கின்றன. குழந்தைகள் இருப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறை வாக இருப்பதன் காரணமாகவே பள்ளிகள் ஒரே அறையில் இயக்கப்படுகின்றன. முக்கியமாக பள்ளி அறைகளை விரிவுபடுத்த போதுமான அளவு நிலம் கிடைக்க வில்லை” என்று அவர் கூறினார். 2023-24ஆம் ஆண்டில் கல்வித் துறைக்கு ரூ.43,651 கோடி ஒதுக்கீடு செய்தும், தொடக்கப்பள்ளியில் இவ் வளவு பெரிய பிரச்சனை உள்ளது. இது கல்வித்துறையை சீரழிக்கும் செயல் என காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல் குஜராத் அரசிற்கு கண்டனம் தெரி வித்துள்ளார்.
ரூ.43,651 கோடி எங்கே?
குஜராத் பாஜக அரசு கடந்த ஆண்டு (2023-24ஆம் ஆண்டுக்கான) கல்வி பட்ஜெட்டிற்காக பிரம்மாண்டமாக ரூ.43,651 கோடி செலவு செய்ததாகக் கூறுகிறது. ஆனால் மாநிலத்தில் 19,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்களால் 1,606 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்குகின்றன. 341 அரசுப்பள்ளிகள் ஒரே ஒரு அறையிலேயே இயங்கி வருகின்றன என அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குஜராத் கல்வித்துறை இவ்வளவு மோசமாக உள்ள நிலையில், ரூ.43,651 கோடியை அம்மாநில பாஜக அரசு என்ன செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. குஜராத் மாடலின் லட்சணம் இதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.