புதுதில்லி, டிச. 3 - உலகளவில் வேலைநேர அதிகரிப்பு காரணமாக 7 லட்சத்து 44 ஆயிரத்து 924 தொழிலாளர்கள் உயிரி ழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization - ILO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பணிபுரியும் இடங்களில் தொழி லாளர்களுக்கு பாதுகாப்பற்ற மோச மான சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் விபத்துகள் மற்றும் நோய்களால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். இதில் 63 சதவிகிதத்திற்கும் அதிக மான உயிரிழப்புகள் ஆசிய - பசிபிக் நாடுகளில் ஏற்பட்டுள்ளது என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகப்படியான வேலைநேரம் (வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக) என்பது மிகப்பெரிய ‘கொலையாளி’யாக உள்ளது என்றும் மிகக்கடுமையாக அந்த அறிக்கையில் சர்வதேச தொழி லாளர் அமைப்பு விமர்சித்துள்ளது.
வேலைநேர அதிகரிப்பால் 7.44 லட்சம் பேர் மரணம்
2016-ஆண்டு சுமார் 7.45 லட்சம் பேர், அதிகமான வேலைநேரம் காரண மாக உயிரிழந்துள்ளனர் என்றும் அதைத் தொடர்ந்து நுண்துகள்கள், வாயுக்கள் மற்றும் புகைகள் ஆகியவற்றின் காரணமாக 4.5 லட்சம் தொழிலாளர்களும், பணியிடங்களில் ஏற்படும் விபத்து காயங்களால் 3.63 லட்சம் தொழிலாளர்களும் உயிரி ழந்துள்ளனர். நவம்பர் 27 அன்று சிட்னியில் நடைபெற்ற ‘பணியிடங்களில் பாது காப்பு மற்றும் ஆரோக்கியம்’ குறித்தான 23-ஆவது சர்வதேச மாநாட்டில் ‘பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கான அழைப்பு’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அபாயகரமான மூன்று தொழில்துறைகள்
அதில் மோசமான பணிச்சூழலின் காரணமாக ஏற்படும் காயங்கள் விகிதம் குறித்த தரவுகள் அடிப்ப டையில், சுரங்கம் மற்றும் குவாரி, கட்டு மானம், மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட துறைகள் உலகளவில் மிகவும் அபாயகரமான மூன்று துறைகள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் ( Employees’ State Insurance Corporation - ESIC) இயக்குநர் ஜெனரல் ராஜேந்திர குமார் கலந்து கொண்டார்.
சர்வதேச ஒப்பந்தங்களை அங்கீகரிக்காத இந்தியா
187 உறுப்பு நாடுகளில் இதுவரை 79 நாடுகள் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார மாநாட்டை (எண். 155) அங்கீகரித்துள்ளன, அதே நேரத்தில் 62 நாடுகள் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார மாநாட் டிற்கான - 2006 (எண். 187) ஊக்குவிப்பு கட்டமைப்பை அங்கீகரித்துள்ளன. ஆனால் இந்தியா இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்க வில்லை. உத்தரகாசி சுரங்கப்பாதை சம்ப வத்தை அடுத்து, இந்த மாநாட்டை அங்கீகரிக்க இந்திய தொழிற்சங்கங் கள் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத் தின.
மோசமான நிலையில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள்
மோசமான பணிச் சூழல் காரண மாக ஏற்பட்ட இறப்புகளில் 26 லட்சம் நோய்களாலும், 3.3 லட்சம் இறப்பு கள் விபத்துகளாலும் ஏற்பட்டுள்ளன. நோய்களைப் பொறுத்தவரை இரத்தக் குழாய் நோய்கள், சுவாச நோய்கள் மற்றும் சுவாச புற்றுநோய் கள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. வேலை தொடர்பான இறப்புக ளை பொறுத்தவரை அதிகளவில் ஆப்பிரிக்காவில் - 7.39 சதவிகிதம், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 7.13 சதவிகிதம், ஓசியானியாவில் - 6.52 சத விகிதம் என்ற அளவில் ஏற்பட்டுள் ளது.
இரட்டிப்பான புற்றுநோய் விகிதம்
2000 முதல் 2016 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் குரோமியம் பயன் பாட்டால் மூச்சுக்குழாய், நுரையீரல் புற்று நோய்களின் விகிதம் இரட்டிப் பாகியுள்ளது என்றும் அந்த அறிக்கை யில் அதிர்ச்சிகரமான தகவல் வெளி யாகியுள்ளது. மேலும் ஆஸ்பெஸ்டாஸால் ஏற்படும் மீசோதெலியோமா, 40 சத விகிதம் அதிகரித்துள்ளது. 2000 முதல் 2020-ஆம் ஆண்டுக்கு இடையில் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயின் விகிதம் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் பாதுகாப்புக்கு ஐந்து ஆலோசனைகள்
இந்த மாநாட்டில் தொழிலாளர்க ளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கி யத்தை உறுதி செய்வதற்காக ‘வேலை யில் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் உரிமைகள்’ என்ற தலைபில் ஐந்து ஆலோசனைகளையும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. 1. தொழிற்சங்கங்களின் சுதந்திர மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையை திறம்பட அங்கீகரிப்பது, 2. அனைத்து வகையான கட்டாய உழைப்பை நீக்குதல், 3. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல், 4. வேலை மற்றும் தொழில் தொடர் பான பாகுபாட்டை நீக்குதல், 5. பாது காப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதிப்படுத்துவது ஆகியவையே அந்த ஆலோச னைகளாகும்.