states

img

சிதறியது லோக் ஜனசக்தி

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் - லோக் ஜனசக்தி  கட்சி (ராம்விலாஸ்)  - ஹிந்துஸ்  தானி அவாமி மோர்ச்சா (மஞ்சி) - ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (குஷ்  வாஹா) - ராஷ்ட்ரிய லோக்ஜன சக்தி (பரஸ்) ஆகிய கட்சிகள் பாஜக வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.  இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு பெற்ற நிலையில், பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 16 தொகுதிகளிலும், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம்விலாஸ்) 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (மஞ்சி), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (குஷ் வாஹா)  கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.  சீட் கிடையாது என ராம்விலாஸ்  பஸ்வானின் சகோதரரான பசு பதி பரஸின் ராஷ்ட்ரிய லோக்ஜன சக்தி (பரஸ்) கட்சியை பாஜக துரத்தி யுள்ள நிலையில்,  பசுபதி பரஸ் தான்  வகித்து வந்த ஒன்றிய அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்து, பெய ரளவிற்கு பாஜக கூட்டணியில் உள்ளோம் என அறிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்துவிட்டார். இந்நிலையில், பாஜக உடனான  கூட்டணி இணைவு மற்றும் சீட் பிரச்ச னையால் லோக் ஜனசக்தி கட்சியின்  (ராம்விலாஸ்) கட்சி சிதறி நொறுங்கி யுள்ளது. முன்னாள் எம்எல்ஏவும், தேசிய பொதுச்செயலாளருமான சதீஷ் குமார், மூத்த தலைவரும்,  கட்சியின் முக்கிய ஆலோசகரு மான ரேணு குஷ்வாஹா, அமைப்பு செயலாளர்கள் ரவீந்திர சிங், அஜய் குஷ்வாஹா, சஞ்சய் சிங் மற்றும் பீகார் பொதுச் செயலாளர்  ராஜேஷ் டாங்கி உள்ளிட்ட 22 பேர்  கட்சியின் அடைப்படை உறுப்பி னர் பொறுப்புகளிலிருந்து விலகு வதாக சிராக் பஸ்வானிடம் ராஜி னாமா கடிதத்தை அளித்துள்ளனர்.  பிரதமர் மோடி தற்போது பீகா ரில் பிரச்சாரம் செய்து வரும் சூழ லில் லோக் ஜனசக்தி கட்சி சிதறி யது பாஜக கூட்டணிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.