கவுகாத்தி,பிப்.26- அசாம் மாநில எல்லையில் 209 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை மேகாலயா காவல்துறையினர் கைப்பற்றினர். அசாம் மற்றும் மேகாலயா இடையே எல்லை விவகாரம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், மேகாலயா காவல்துறையினர் எல்லை பகுதியில் சோத னையில் ஈடுபட்டிருந்தனர். இதில், அசாம் மற்றும் மேகாலயா எல்லையில் அமைந்த ரி-போய் மாவட்டத் தில் பைர்னிஹத் பகுதியில் வாகனம் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்றுள் ளது. இதனை மறித்து சோதனையிட்ட தில், வெடிபொருட்களை மறைத்துக் கொண்டு சென்றது தெரிய வந்தது.இந்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போதிய ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. அவர்களது வாகனத்தில் 209.93 கிலோ எடை கொண்ட ஜெலட்டின் குச்சிகள், அலுமினியம் கலந்த எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் வேறு வகை டெட்டனேட்டர்களையும் பறி முதல் செய்துள்ளனர்.