states

எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தினால் 2024 தேர்தல் பாஜக-வுக்கு கஷ்டமாகி விடும்!

புதுதில்லி, பிப். 18 - வாய்ப்புள்ள இடங்களில் எதிர்க்கட்சி கள் பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு நெருக்கடியைத் தர முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறி யிருப்பதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொ துத்தேர்தல் பரபரப்பாக அமையும். ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக-வை எதிர்ப்பதற்கு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தினால், அது பாஜக-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும். 2019-ஆம் ஆண்டு, பாஜக பிற கட்சி களை துடைத்தெறிந்து விட்டது போன்ற வெற்றியை, பல மாநிலங்களில் பெற்ற வெற்றியை 2024 தேர்தலில் பெறுவது கடினம் ஆகிவிடும். கடந்த 2 தேர்தல்களில், பாஜக முறையே 31 மற்றும் 37 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதில் இருந்து நாம் கண்ட பாடம், எதிர்க்கட்சிகளின் பிளவு, பாஜக வுக்கு சாதகமாகி விடுகிறது என்பதுதான். எனவே, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது முக்கியமான விஷயம். அது பல்வேறு விதங்க ளில் அமையலாம். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக அமையலாம் அல்லது இடங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வதாக அமையலாம். இதனால் முடிந்த வரை, வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் கள், பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக தெளி வான வெற்றியைப் பெற முடியும்.  இறுதித் தீர்வை (பிரதமர் பதவி) தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் நாட்டில் இப்போது நிறைய மாற்றங் கள் வந்துள்ளன. உதாரணமாக, பீகாரில் பாஜக-வின் முன்னாள் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் இப்போது எதிர்க்கட்சி கள் அணிக்கு வந்து விட்டது. நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலையும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டில் பாஜக வீழ்ந்து விடலாம். இவ்வாறு சசிதரூர் கூறியுள்ளார்.