தேசிய குற்றப் பதிவுகள் ஆணையத்தின் விபரங்களின் படி 2019 - 2021 இரண்டே ஆண்டுகளில் இந்திய நாட்டில் 13.13 லட்சம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு மோடி அரசாங்கம் எடுத்துள்ள முன்முயற்சிகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் ஒன்றின் மூலமாகவே இது வெளியில் தெரியவந்துள்ளது என்பதுதான் மிகப் பெரும் முரண். 2021 கணக்கின்படி தினமும் 86 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவாகியுள்ளன; ஒவ்வொரு மணி நேரமும் 49 பெண்கள் மீதான வன்முறைகள் பதிவாகியுள்ளன. மோடி அரசாங்கம் என்றால் பேய்த்தனமான, மிருக வெறி பிடித்த இரட்டை வேடம் என்று கடுமையாக விமர்சிக்க இதைவிட வேறு என்ன வேண்டும்?
சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)