புதுதில்லி, ஜன. 21 - கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அந்நிய நேரடி முத லீடு வரவானது, 26 சதவிகிதம் சரிந்து ள்ளதாக ஐக்கிய நாடுகளின் வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. சா்வதேச அளவிலான அந்நிய நேரடி முதலீட்டு நடவடிக்கைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் மிகவும் வலுவான நிலையில் இருந்தன. அதன்படி 2020-இல் 929 பில்லியன் டாலராக இருந்த இவ்வகை முத லீடு 2021-இல் 77 சதவிகிதம் அதி கரித்து 1.65 டிரில்லியன் டால ரைத் தொட்டுள்ளது. அதாவது, சா்வ தேச அளவில் கடந்தாண்டில் அந்நிய நேரடி முதலீட்டு அளவானது கொரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையை தாண்டியுள்ளது. ஆனால், தெற்காசியாவில் அந்நிய நேரடி முதலீடு 71 பில்லியன் டாலரிலிருந்து 24 சதவிகிதம் சரி வடைந்து 54 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. 2020-இல் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நட வடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப் படாததே இதற்கு முக்கியக் கார ணம் என்று ஐக்கிய நாடுகளின் வர்த்தக அமைப்பு தெரிவித்துள் ளது. அதேநேரம், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடானது 2021-ஆம் ஆண்டில் 20 சதவிகிதம் அதிகரித்து 179 பில்லி யன் டாலராக இருந்தது என்றும் ஐ.நா. வா்த்தக அமைப்பு மதிப் பிட்டுள்ளது.