states

img

இந்தியர்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின் ஆதாரங்கள் வரை 18.4 கோடி தரவுகள் திருட்டு

இந்தியர்களின் கடவுச்சொற்கள் முதல் வங்கிக் கணக்குகளின் ஆதாரங்கள் வரை 18.4 கோடி தரவுகள் திருட்டு

சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெரமியா பவுலர் அதிர்ச்சி தகவல்

பிரபல சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி யாளர் ஜெரமியா பவுலர் ஒரு பாது காக்கப்படாத ஆன்லைன் தரவுத்தளத்தை கண்டறிந்தார். அதில் மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீ கார இணைப்புகள் இருந்துள்ளன. இவை  அனைத்தும் எளிய உரையில் சேமிக்கப் பட்டுள்ளன. அதாவது ஆன்லைனில் அந்த கோப்புகளை எவரும் எளிதாக அணுகி முக்கியமான தகவல்களைப் பெற முடியும் என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து ஜெரமியா பவுலர் கோப்பு களை ஆராய்ந்த போது உலகளவில் கூகுள்,  ஆப்பிள், மைக்ரோசாப்ட், முகநூல், இன்ஸ்டா கிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்து வோரின் கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு களின் கடவுச் சொற்கள் மற்றும் ஆதாரங்கள், சுகாதார சேவைகள் தொடர்பான விவரங்கள் கசிந்ததை கண்டறிந்துள்ளார். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 18.4 கோடி தரவுகள் திருடப்பட்டு இருக்கலாம் என ஜெரமியா பவுலர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. “டார்க்” வலைதளத்தில் விற்பனை மேலும் “இன்போஸ்டீலிங் மால்வர்” வகை மென்பொருள் மற்றும் “லும்மா ஸ்டீலர்”  போன்ற தீங்கு விளைவிக்கும் மென்பொரு ளானது பாதிக்கப்பட்ட சாதனங்களிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், வங்கி தகவல்கள் மற்றும் பலவற்றை ரகசியமாக சேகரிக்கிறது. பிறகு அவை அனைத்தும் டார்க் வலைதளத்தில் விற்கப்படுகிறது. இவ்வாறு 18.4 கோடி தரவுகள் திருடப்பட்டுள்ளன என ஜெரமியா பவுலர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் அதிகம் ஜெரமியா பவுலரின் ஆய்வு கருத்துக்கள் தொடர்பாக சர்வதேச அளவிலான சைபர் விசாரணை நடைபெற்றது. அதில் கசிந்த தக வல்கள் உண்மை என செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனால் உலகளவில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெறும் அச்சம் நிலவு கிறது. குறிப்பாக 18.4 கோடி தரவுகளில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்களுக்கும் அதிக பாதிப்பு முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் தரவுகள் வங்கிக் கணக்குகளின் தரவுகளும் திருடுபோயுள்ளதால் பெரும் நிறுவனங்கள், அரசு துறைகளைக் கடந்து மக்கள் நேரடியாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மக்கள் வங்கியின் செய லியைப் பயன்படுத்தாமல், கூகுள் குரோம் செயலி மூலம் வங்கி வலைதளத்துக்கு சென்று, பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் பதிவிடுபவராக இருந்தால், உங்களின் வங்கித் தரவுகளும் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. தரவுகள் இடம்பெற்றுள்ள டார்க் வலைதளத்தை நாடும் சைபர் குற்றவாளிகள் அவர்கள் குறி வைக்கும் தரவுகளை பணம் கொடுத்து பெற்று,  தாக்குதலுக்கு முயற்சிக்கலாம். இதனால் உல களவில் பெரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் உடனடியாக தங்களின் சமூக ஊடக கணக்குகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட வற்றின் கடவுச்சொற்களை மாற்ற தொழில் நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மிகுந்த கவனம் தேவை பயனர் பெயர்,

கடவுச்சொற்கள் போட்டவுடன் உள்ளே நுழையும் வகையில் இருக்கும் கணக்குகளை, ஓடிபி பதிவிட்டால் மட்டுமே உள்நுழையும் வகையில் மாற்ற வேண்டும். ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை சமூக ஊடகங்கள், வங்கிக் கணக்குகள் என அனைத்துக்கும் வைத்திருப்பவர்கள் உடனடியாக தனித்தனி கடவுச்சொல்லை மாற்ற வேண்டும். செல்போன்களுக்கு வரும் ஓடிபி எண்ணை எக்காரணம் கொண்டும் யாருக்கும் பகிரக்கூடாது. அதனால் இந்த சிக்கலான நேரத்தில் மிக கவனமாக கடவுச்சொற்களை மாற்றுவது நல்லது.