தில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன் னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா (45) கடந்த மார்ச் 15 அன்று ஹைதராபாத் தில் கைது செய்யப்பட் டார். கைதை எதிர்த்து கவிதா உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தில்லி நீதிமன் றத்தை அணுக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையெடுத்து தனது மகனின் தேர்வை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கவிதா தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் தார். இந்த மனு செவ்வாயன்று விசார ணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர் பாக கவிதாவை விசாரிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, ஏப்ரல் 9 வரை (14 நாட்கள்) நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிட்டார்.