புதுதில்லி, செப். 8 - அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன் கார்ட்’ பெறுவதற்கு 10.7 லட்சம் இந்தியர்கள் காத்திருப்ப தாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து நடைமுறைப் படுத்த 134 ஆண்டுகள் ஆகிவிடும் என்பதால், சுமார் 4 லட்சம் இந்தியர்கள், தங்களின் வாழ்நாளுக்குள் ‘கிரீன் கார்ட்’ பெற வாய்ப்பில்லாமலேயே இறந்து விடுவார்கள் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. கேட்டோ இன்ஸ்டிடியூட்டின் குடிவரவு ஆய்வுக ளின் இணை இயக்குநரான டேவிட் ஜே. பியர், இது தொடர்பாக நடத்திய ஆய்வில் EB-2 மற்றும் EB-3 விண்ணப் பங்கள் அதிகளவில் தேங்கியிருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண் ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக வும் இதனால் 1.34 லட்சம் இந்திய சிறுவர்களுக்கு, கிரீன் கார்டைப் பெறுவதற்கு முன்பே வயதாகி விடக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க கிரீன் கார்டுக்காக புதிதாக EB-2 மற்றும் EB-3 விண்ணப்பம் செய்யும் இந்தியர்கள் தங்கள் ஆயுளுக்கும் காத்திருக்க நேரிடும் என்று குறிப்பி டப்பட்டு உள்ளது. கிரீன் கார்டு கோரி வரும் விண்ணப்பங்களில், ஆண்டிற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கிரீன் கார்டுகள் மற்றும் ஒவ்வொரு நாட்டினரிடம் இருந்து வந்த விண்ணப்பத் தில் 7 சதவிகிதம் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப் படும் என்ற கட்டுப்பாட்டை அமெரிக்க அரசு பின்பற்றி வருகிறது. இதனாலேயே கிரீன் கார்டு எளிதில் கிடைக் காது என்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.