states

img

1.2 கோடி தொழிலாளர்கள் விடுபடும் அபாயம்

புதுதில்லி, ஆக.30-  

       மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலைசெய்பவர்களின் ஆதார் அட்டை இணைக்கப்படாததால் இத்திட்டத்தில்  வேலைசெய் பவர்களில் கோடிக்கணக்கானவர்கள் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்.  

     100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்கள் ஆதார் அடிப்படையிலான பணம் கொடுக்கல் முறையில் இணைந்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்று ஒன்றிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

      ஆனால் நாட்டில் இதற்காக வேலை அட்டை வைத்திருக்கும் 26 கோடி பேர்களில் 41.1 விழுக்காடு பேர்  இதுவரையிலும் இதற்குத் தகுதி பெற வில்லை. ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்காக மேலும் கால நீட்டிப்பு செய்ய முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.

    இதனால் நாட்டில் 1.2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இப்பிரச்சனையில் ஒன்றிய அரசாங்கம் உடனடியாகத் தலை யிட்டு, எவரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பிருந்தாகாரத், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.  

    அந்த கடிதம் வருமாறு:  

   மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் சம்பந்தமாக அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கை களால் பல  மோசமான பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன என்பதை தங்கள் கவனத் திற்குக் கொண்டுவரு கிறேன்.

     இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு  மிகவும் குறைவு. தங்கள் அமைச்சகத்தின் இணைய தளத்தின்படி இதற்கு ஒதுக்கிய தொகை களில் 91 விழுக்காடு ஏற்க னவே செலவாகிவிட்டது. இத்திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களின் சராசரி நாட்கள் தற்போது 35.4 என  குறைந்துவிட்டது. இத்தகு சூழ்நிலையில் இத்திட்டத்  தின்கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்கள் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொள் கிறார்கள்.

    இப்போது ஆதார் அடிப்படையில் பணம் பட்டு வாடா செய்வதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதனால் தொழிலாளர் களுக்கு காலத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை.

    அரசுத்தரப்பில் இவ்வாறு ஆதார் அடிப்படையில் ஊதியம் வழங்கப் படுவது கட்டாயப்படுத்தப்படாது என்று ஜூன் மாதத்தில் கூறப்பட்டது. எனினும் இக்காலக்கெடு நீட்டிக்கப் படாது என தி இந்து நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 26 கோடி வேலை அட்டைதாரர்களில் 41.1 விழுக்காட்டினர் இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறவில்லை என்று அது கூறு கிறது. ஐந்து மாநிலங்களில் 1.2 கோடி தொழிலாளர்கள் ஊதியம் பெறத் தகுதி யற்றவர்களாகி இருக்கிறார்கள். இத னால் தொழிலாளர்களுக்குப் பெரிய  அளவில் இழப்பு ஏற்படும் என்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருக் கின்றன.

கிராமப்புறங்களில் ஆன்லைன் இணைப்பு மிக மோசம்

     கடந்த ஆறு மாதங்களில் நான் பல மாநிலங்களில் பல தொழிலாளர்களைச் சந்தித்தேன். ஆன்லைன் பதிவு மூலம் வருகையை உறுதிப்படுத்துவது சம்பந்தமாக எண்ணற்ற புகார்களை அவர்கள் என்னிடம் அளித்தார்கள். கிராமப்புற இந்தியாவில் ஆன்லைன் இணைப்பு என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மிகமிக மோச மாகும். இவர்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இந்தத்தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமங்களை ஏற்படுத்திடும்.  

    இத்திட்டத்தில் வேலை செய்திடும்  பெண் தொழிலாளர்கள் இந்த முறை யின் மூலமாக மிகவும் பாதிக்கப்படு வார்கள். இதனால் அவர்கள் பல இடங் களில் வேலை செய்தும் ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது.

     இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள் ளார். (ந.நி.)