புதுதில்லி, ஜூலை 27- அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு கடைசி வாய்ப்பாக அவர், செப்டம்பர் 15 வரை பதவியில் நீடிக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 3-ஆவது முறையாக வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை எதிர்த்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சமூக ஆர்வலரும், மத்தி யப் பிரதேச மகளிர் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான டாக்டர் ஜெயா தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில், கடந்த ஜூலை 11 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில், “சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக, ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும் அறி வித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஜூலை 31-க்குப் பிறகு, அவர் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது” எனவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், சஞ்சய் குமார் மிஸ்ரா வின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா செப்டம்பர் 15 வரை பதவி யில் நீடிப்பதற்கு அனுமதி வழங்கி உத்தர விட்டுள்ளது. முன்னதாக “மிஸ்ராவின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்த பதவிக்குரிய கடமையை செய்ய முடி யுமா? அமலாக்கத்துறையில் அவரது வேலையைச் செய்யக்கூடிய வேறு ஆள் இல்லையா? சஞ்சய் குமார் மிஸ்ரா மட்டும் அவ்வளவு இன்றியமையாதவராக ஏன் இருக்கிறார்? என்று ஜூலை 11 அன்று எழுப் பிய கேள்விகளை மீண்டும் எழுப்பிய நீதி பதிகள், நிறைவாக, செப்டம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவு அடைந்ததாக கருதப்படும். அதன்பிறகு எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப் படாது” என்று தீர்ப்பளித்தன.