பாஜக ஆளும் திரிபுரா மாநிலத் தின் முதல்வராக இருப்பவர் மாணிக் சாஹா. இவர் மோடி யின் புகழ்பாடுவதற்காக ராமாயணம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மாணிக் சாஹா கூறுகை யில்,”1980இல் ஒவ்வொரு ஞாயிறன் றும் தூர்தர்ஷனில் “மகாபாரதம்” மற்றும் “ராமாயணம்” இதிகாசங்களின் அத்தியா யங்களைப் பார்க்க தாய்மார்களும் சகோ தரிகளும் தொலைக்காட்சியை நோக்கி விரைவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளி லும், பிரதமர் மோடியின் “மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கேட்க நம் தாய்மார்களும் சகோதரிகளும் விரைந்து செல்வதைப் பார்க்கிறோம். இந்த திட்டம் 1980 களின் தொடர்களை விட மிகவும் பிரபலமானது” என்று அவர் கூறினார். தனிப்பட்ட ஒரு நபருக்காக (மோடி) 1980இல் புகழ்பெற்ற தாக திகழ்ந்த ராமாயணம், மகாபார தத்தை இழிவுப்படுத்தியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் பாஜக முதல்வர் மாணிக் சாஹா வறுபட்டு வருகிறார்.