states

img

திரிபுரா தேர்தலுக்கு குஜராத், அசாம் போலீஸ் எதற்கு?

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

புதுதில்லி, பிப்.12- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரி புராவில் பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாது காப்பு பணிக்காக எல்லைப் பாதுகாப்பு படை  (பிஎஸ்எப்), மத்திய துணை ராணுவப் படை களை (சிஆர்பிஎப்) நிறுத்தாமல் குஜராத், அசாம்  மாநில போலீஸ் படைகளை அனுப்புவது குறித்  தும்,  தபால் வாக்குப்பதிவில் குழப்பநிலையை போக்கவும், திரிபுரா தேர்தல் பாதுகாப்பு அதி காரியாக நியமிக்கப்பட்டுள்ள- சிஆர்பிசி (குற்ற வியல் நடைமுறைச் சட்டம்) விதிகளின் கீழ்  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள- துணைப் பிரிவு போலீஸ் அதிகாரியான ஸ்ரீ ராகுல் தாஸை  (பிஷால்கர் பகுதி) பதவி நீக்கம் செய்யக் கோரி யும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் திரிபுரா தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு படை

பாதுகாப்பு படை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு அனுப்பியுள்ள கடிதத்தில்,”திரிபுராவில் சட்டப் பேரவைக்கு அச்சம் மற்றும் பயம் இல்லாத  சூழலில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர் தலை நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் எங்களுக்கு பெரிய அளவில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 19,  2023 அன்று ஆணையத்துடனான சந்திப்பில் உறுதியளிக்கும் உணர்வு மேலும் உறுதிப்படுத் தப்பட்டது. ஆனால் தற்போது சில நிகழ்வுப் போக்குகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.  அசாம், குஜராத் மாநில காவல்துறையின ரும் திரிபுராவில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்குப் பதிலாக,  மற்ற மாநில போலீஸ் படைகளை அனுப்புவது  அசாதாரணமானது. இது பொதுத் தேர்தல் அல்ல. அசாம் முதல்வர் திரிபுராவில் முகா மிட்டுள்ளார். இந்நிலையில், அசாம் காவல் துறையினர் இங்கு குவிக்கப்பட்டிருப்பது மிக வும் கவலை அளிக்கிறது. அதேபோல் குஜராத்  காவல்துறையை நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலையில் உள்ள இந்த சிறிய வடகிழக்கு மாநிலத்திற்கு அனுப்புவது திரிபுராவின் தேர்தல் முடிவை நிச்சயம் பாதிக்  கும். எனவே சுதந்திரமான மற்றும் நியாய மான வாக்குப்பதிவு நடைபெறவும், எல்லை,  மத்தியப் படைகள் மட்டுமே நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள் ளது.

தபால் வாக்குப்பதிவில் குழப்பநிலை

தபால் வாக்குப்பதிவில் ஏற்பட்ட குழப்ப  நிலை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி யிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரி புரா மாநிலக்குழு சமர்ப்பித்த கடிதத்தில், “இடிசி (EDC - மின்னணு தரவு) வாக்குப்பதிவு கவுன்ட்டர்களில் குழப்பமான சூழ்நிலை நிலவு கிறது. 

1.    அதிக நேரம் காத்திருக்க வைப்பதால் வெறுப்படைந்து வாக்குச்சாவடி ஊழி யர்கள் சிலர் வாக்களிக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

2.     பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்காக கவுன்ட்டரை அணு கும்போது வாக்குச்சாவடி ஊழியர்கள்  பலர் தங்களது வாக்குச் சீட்டு இன்னும்  வரவில்லை என்று அலைக்கழிக்கப்படு கிறது.

3.    சில மையங்களில் வாக்குச் சீட்டு தட்டுப்  பாடு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப் படுகிறது.

4.    தங்கள் தேர்தல் பணியின் இடத்தில் தங்கி யிருக்கும் பல நுண் பார்வையாளர்கள் தபால் வாக்களிக்க உடனடியாக தங்கள்  சொந்த துணைப் பிரிவுக்குத் திரும்பிச்  செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள்.

5.    சோனமுரா துணைப்பிரிவு மற்றும் வேறு  சில இடிசி மையத்தில் வாக்களித்தவர் களுக்கு விரலில் அழிக்க முடியாதமை பயன்படுத்தப்படவில்லை.

6.     இதற்கு முன்பு மாநிலத்தில் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கான வாக்குப்பதிவு மையங்  கள் இதுபோன்ற குழப்பமான சூழ்நிலை யை எதிர்கொண்டதில்லை. இந்தத் தேர்த லில் அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சாவடி ஊழியர்களின் வாக்களிக்கும் உரி மையைப் பறிக்கும் வேண்டுமென்றே ஒரு  சூழ்ச்சி நடக்கிறது என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களின் பணியா ளர்கள் உட்பட ஒவ்வொரு வாக்குச்சாவடி ஊழியர்களின் வாக்குப்பதிவை, தேவைப்  பட்டால் இடிசி வாக்களிக்கும் அட்டவணை யை நீட்டிக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.

ஸ்ரீ ராகுல் தாஸ் நியமனம்

திரிபுரா தேர்தல் பாதுகாப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ள சிஆர்பிசி (குற்றவியல் நடைமுறைச் சட்டம்) விதிகளின் கீழ்  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள துணைப் பிரிவு போலீஸ் அதிகாரியான ஸ்ரீ ராகுல் தாஸை  (பிஷால்கர்) பதவி நீக்கம் செய்யக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக் குழு சமர்ப்  பித்த கடிதத்தில், ‘‘சிஆர்பிசி (குற்றவியல் நடை முறைச் சட்டம் - FIR எண். 15/2023) விதிகளின் கீழ் குற்றச்சாட்டுகள் மற்றும் பாரபட்சமான நட வடிக்கைக்காக ஸ்ரீ ராகுல் தாஸை தற்போ தைய பதவியில் இருந்து நீக்குமாறு இரண்டு  முறை (ஜனவரி 30,பிப்ரவரி 5, 2023 அன்று)  கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் 12 பிரிவு களில் (307,174,148,149,134,109,184,120பி,435, 427,125, 30எப்) பல கடுமையான குற்றப்பிரிவு களில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியான இவர்,  இன்னும் பதவியில் நீடிப்பதுடன், தேர்தல் பணி யையும் மேற்கொள்வது ஆச்சரியமாக உள்  ளது. உயர் அதிகாரியாக இருப்பதால் குற்றம்  சாட்டப்பட்ட ராகுல் தாஸை எந்த அதிகாரியா லும் விசாரிக்க முடியாது என்ற சூழலும் உள்ளது.  மேலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ராகுல் தாஸை இந்தப் பதவியில் இருந்து நீக்கி சுதந்  திரமான உயர் போலீஸ் அதிகாரியால் விசா ரிக்கப்பட வேண்டும்’’ என்று கடிதத்தில் கூறப்  பட்டுள்ளது.