மீண்டும் தேர்தலை நடத்த சிபிஎம் கோரிக்கை
அகர்தலா, செப்.6- திரிபுராவின் போக்ஸாநகர், தன்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் இரு தொகுதிகளிலும் பலத்த பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி புனித் அகர்வாலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேந் திர சவுத்ரி எழுதிய கடிதம் வருமாறு: திரிபுராவில் போக்ஸாநகர் (20) மற்றும் தன்பூர் (23) ஆகிய தொகுதி களுக்கு செவ்வாயன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக காவல்துறை, அரசு நிர்வாகத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி குண்டர்களு டன் அசாதாரணமான பயங்கரவாத சூழ்நிலையை அரங்கேற்றி தேர்தலில் மோசடி செய்துள்ளது. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியாட்களை வெளியேற்றுவதற்கு பதிலாக, துஷ்பிரயோகம் செய்யும் குண்டர்களை வாக்குப்பதிவு நடை பெறும் பகுதிகளில் அதிக அளவில் உள்ளே நுழைய அனுமதித்துள்ளது ஆளும் பாஜக அரசு. செப்டம்பர் 3 அன்று இரவு முதலே 2 தொகுதிகளின் பல பகுதிகளில் வன்முறையை அரங் கேற்றும் வகையில் குண்டர்கள் குவிக்க ப்பட்டனர். செப்டம்பர் 4 அன்று இரவு சிபிஎம் தலைவர்களில் ஒருவரான அபு ஜாபர், போக்ஸாநகரில் உள்ள அவ ரது வீட்டில் பாஜக வேட்பாளர் டோபசல் ஹுசைன் என்பவரால் தாக்கப்பட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.
சிபிஎம் முகவர்கள் வெளியேற்றம்
போக்ஸாநகர் சட்டமன்ற தொகுதி யில் 16 பேரும், தன்பூரில் 19 பேரும் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல முடிந்தது. ஆனால் அவர்களில் பெரும் பாலானோரை பாஜக குண்டர்கள் வாக்குச்சாவடிகளில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றினர். வாக்குப்பதிவு நாளன்று அதிகாலை முதலே பாஜகவினரால் அழைத்து வரப் பட்ட வெளியாட்கள் எதிர்க்கட்சி ஊழி யர்களை வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டாம் என அச்சுறுத்தி மிரட்டல் விடுத்தனர். பாஜக குண்டர் களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் வாக்குச் சாவடிக்கு நுழைய முயன்றவர் களுக்கு, மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்த னர். தன்பூர் சட்டப்பேரவை தொகுதி யில் பல உண்மையான வாக்காளர் களை வாக்களிக்கவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அடியாளாக மாறிய பாஜக அமைச்சர்
பாஜக அமைச்சர் பிகாஷ் டெபர்மா குண்டர்களின் குழுவிற்கு தலைமை தாங்கி, தாக்குதலை தூண்டிவிட்டு, கவனித்தார். இந்த தாக்குதலில் மோகன்போக்கில் டிஒய்எப் (TYF - Tribal Youth Federation) தலைவர் ஜெயந்தா டெபர்மா படுகாயமடைந்து அகர்தலாவின் ஜிபி பந்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமபட ஜமாத்தியா என்ற பாஜக எம்எல்ஏவும் ஏராளமான வெளியாட் களுடன் சுற்றித் திரிந்தார்.
கள்ள ஓட்டுகள்
வராத வாக்காளர்கள் பெயரில் அதிக எண்ணிக்கையிலான வெளியா ட்கள் வாக்களித்தனர். பல வாக்குச் சாவடிகளில் பெரும்பாலான வாக்கா ளர்கள், பாஜக குண்டர்கள் முன்னிலை யில் வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட னர். வாக்காளர்கள் சார்பாக கள்ள ஓட்டு போட்டனர். மாநில நிர்வாகத்திடம் இருந்து மறைமுகமான சிக்னல் கிடைத்ததால் பாஜக குண்டர்களின் அராஜகத்தை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை .இதன் மூலம் இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. இந்த நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு போக்ஸாநகர், தன்பூர் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தேர் தல் நடத்த கோரிக்கை விடுக்கிறது. வாக்காளர்களை அச்சுறுத்த ஏராளமான குண்டர்களை வழிநடத்திய அமைச்சர் பிகாஷ் டெபர்மாவை கைது செய்ய வேண்டும். எஸ்பி செபாஹிஜா லாவையும் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆர்ஓஎஸ்-களை நீக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் உட்பிரிவில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் நிர்ப்பந்தத்தின் கீழ் பணிபுரிய வேண்டி யிருப்பதால், தேர்தல் நடத்தப்படும் மாவட்டத்திற்கு வெளியில் இருந்து தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.