states

திரிபுராவில் பாஜகவின் வன்முறை வெறியாட்டங்கள் நாடு முழுதும் கண்டனம் முழங்குக: சிபிஎம்

புதுதில்லி, மார்ச் 6- திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் பாஜகவினர் வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டதைக் கண்டித்து நாடு  முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரிபுராவில் தேர்தலுக்குப்பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் எதிர்க்கட்சி  ஊழியர்களுக்கு எதிராக பாஜகவின ரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  மார்ச் 2 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த சமயத்தில் பாஜக சற்றே பெரும்பான்மை பெறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோது, ஜன நாயகத்தைப் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யும் விதத்தில் வன் முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. பாஜக, தன்னுடைய வாக்கு களில் 10 விழுக்காட்டிற்கும் மேலாக  இழந்து, மிகச் சிறிய அளவிலான பெரும் பான்மையுடன் வெற்றிபெற்றதை ஏற்க இயலாமல் வன்முறை வெறி யாட்டத்தைக்  கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள்

மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் களின் வீடுகளின் மீதும், சொத்துக் களின் மீதும் வன்முறைத் தாக்குதல் கள் மிகப்பெரிய அளவில் ஏவப்பட்டுள் ளன. அவர்களைத் தாக்கி, அவர்களிடம் பணம் பறிக்கும் ஈனச் செயல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சாமா னிய மக்களின் வாழ்வாதாரங்கள் மீது  தடை விதிக்கும் போக்கும் தொடர்ந்து  கொண்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற் பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதில், இதுவரை மூன்று பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி தூதுக் குழுவினரைச் சந்திக்க ஆளுநர் கிடைக்காத காரணத்தால், மாநில நிர்வாகத்திடம் 668 வழக்குகளுக் கான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக் கின்றன.  மாநில நிர்வாகமும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிர்வாக எந்திர மும் உடனடியாகத் தலையிட்டு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீட்கவும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை யான நிதி மற்றும் மருத்துவ நிவாரண  உதவிகள் அளித்திடவும் முன்வர வேண்டும் என்று அரசியல் தலைமைக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. திரிபுராவில் ஜனநாயகம் படு கொலை செய்யப்பட்டிருப்பதற்கும், பாஜக வன்முறை வெறியாட்டங் களைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டன இயக்கங் களை மேற்கொள்ளுமாறு அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் கட்சியின் அர சியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிஐடியு அறைகூவல்

இதே போன்று சிஐடியுவும் திரிபுரா வில் பாஜகவினர் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராகக் கண்டனம் முழங்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது. (ந.நி.)