டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!
சென்னை, அக். 21 - நாடு முழுவதும் அடுத்த வாரம் வியாழக்கிழமை(அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர் களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதனொரு பகுதியாக, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட வுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 16,800 வரை போனஸ் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்!
சேலம், அக். 21 - காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு ஞாயிறன்று காலை விநாடிக்கு 15 ஆயிரத்து 929 கன அடி விகிதமாக இருந்த நீர்வரத்து, திங்களன்று காலை 18 ஆயிரத்து 094 கன அடி யாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டமும் 96.90 அடியிலிருந்து 97.89 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 62.14 டிஎம்சி யாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி விகிதமும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!
சென்னை, அக். 21 - கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 160 உயா்ந்து, ரூ. 58 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. கிராம் ரூ. 7,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை யும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ. 109-க்கு விற்பனையானது.
தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் சுகாதார சேவை இயக்குநர் எச்சரிக்கை
சென்னை, அக். 21- யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை சமீபத்தில் பதிவேற்றி இருந்தார். இந்த வீடியோ தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க வேண்டுமென மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெ. ராஜமூர்த்தி கூறியுள்ளார். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகி யோர் தான் தொப்புள் கொடி அறுக்கும் பணியைச்செய்ய வேண்டும். இர்பான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. மேலும், சம்பவத்தின் போது இர்பான் முழுக்கை சட்டை அணியவில்லை என்பதால், குழந்தைக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் இதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் பெறப்பட்டதும் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கை தொடரும் எனவும் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெ. ராஜமூர்த்தி கூறியுள்ளார்.
நாவரசு படுகொலை ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்
சென்னை, அக். 21 - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி யிருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவர் நாவரசு 1996 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1998-ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனினும், கடலூர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால், கைது செய்யப்பட்ட ஜான் டேவிட், தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.