states

பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக்க முயற்சிப்பதா?

சென்னை,ஜன.14-   மலம் கலந்த குடிநீரை பருகிய தால் பாதிக்கப்பட்ட தலித் மக்  களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்  நேரில் சந்திக்க வேண்டும். அது  அந்த மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாயி ருக்கும் என்று எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ச.பால முருகன், அழகிய பெரியவன், சுகிர்  தராணி, யாழன் ஆதி, ஆதவன்  தீட்சண்யா ஆகியோர் முதலமைச்ச ருக்கு அனுப்பிய கடிதம் வரு மாறு: தமிழர் திருநாளாம் பொங்கலை நாம் உற்றார் உறவினரோடு  கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வேங்கைவயல் தமிழர்களாகிய தலித்துகள் மலம்  கரைக்கப்பட்ட தண்ணீரில் எப்படி  பொங்கல் வைப்பதென மருகிக்  கிடக்கும் அவலத்திற்கு ஆளாக்கப்  பட்டுள்ளனர். அந்தச் சிற்றூரில்  அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வேறுசில தீண்டாமைக்கொடு மைகள் புதுக்கோட்டை மாவட்ட  நிர்வாகத்தால் முடிவுக்கு கொண்டு வரப் பட்டிருந்தாலும், அவர்களது குடிநீரில் மலத்தைக் கலந்த கொடூ ரர்கள் இன்னமும் கைது செய்யப்பட வில்லை. விரைவில் கைது செய்யப்  படுவார்கள் என்று எதிர்பார்த்தி ருந்த வேளையில் அங்கிருந்து  வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டு கின்றன.

குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையின் தனிப்படை, வன்  கொடுமைக்காளான தலித்து களையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது. தலித்துகளால் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் என சுட்டப்படு வோரை சுதந்திரமாக நடமாட அனு மதித்துவிட்டு, விசாரணை என்கிற  பெயரில் தலித்துகளை வரவ ழைத்து மிரட்டியும் அடித்துத் துன்  புறுத்தியும் பொய்யான வாக்கு மூலங்களைப் பெறுவதற்கு தனிப்  படை முனைப்பு காட்டிவருகிறது. அவர்களது குடிநீர்த் தொட்டியில் அவர்களே மலத்தைக் கலந்துவிட்டு அதே தண்ணீரை குடித்துக் கொண்டிருப்பதற்கு மனம் ஒப்புமா  என்கிற குறைந்தபட்ச தர்க்கத்தின் படியாகக்கூட யோசிக்காமல், இப்படி தலித்துகள் மீதே பழிசுமத்து வதானது மறுபடியும் மலம் கலப்ப தற்கு ஈடான குற்றமாகும். காவல் துறை தனிப்படையின் இந்த அட்டூ ழியத்தை பாதிக்கப்பட்ட மக்கள் துணிச்சலுடன் ஊடகங்கள் வழியே  வெளிக்கொணர்ந்துள்ளனர்.  மனிதமாண்புகளுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கிற  எழுத்தாளர்களும் கலை ஞர்களுமாகிய நாங்கள் இவ் வேளையில் தன்மதிப்புக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் போராடிவருகிற வேங்கைவயல் தலித்துகளுக்கு எமது ஒருமைப் பாட்டைத் தெரிவிக்கிறோம். 

விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைத்திடுக

நம்பகமற்றதாகவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் விருப்பு றுதியற்றதாகவும் உள்ள தனிப்ப டையின் செயல்பாடானது தலித்  விரோதமானது மட்டுமன்றி வன்  கொடுமைகளை இழைப்பவர்  களுக்கு ஆதரவானதாகவும் மேலும் வன்கொடுமைகள் நிகழ்த்தப் படுவதற்கு ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. எனவே இப்பிரச்சனை யை சிபிசிஐடி போன்ற வேறு புல னாய்வு அமைப்பிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக் கள் எழுப்பும் கோரிக்கையினை நாங்களும் வலியுறுத்துகிறோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளில் பாதிக்கப்பட்ட தலித்துகளை பணியவைக்க எதிர் வழக்கு தொடுக்கும் கடந்த  ஆட்சிக்காலங்களின் அணுகுமுறை யை தங்களது ஆட்சியிலும் காவல்  துறையினர் தொடர்வதற்கு தாங்கள் அனுமதிக்கக்கூடாதென வலி யுறுத்துகிறோம்.

தாங்கள் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பது அவர்களுக்கு ஆறுத லையும் நம்பிக்கையையும் அளிப்ப தாயிருக்கும். விசாரணையின் மீது தங்களது நேரடி கண்காணிப்பு தேவை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களும் வேங்கைவயலில் முகாமிட்டு அப்பகுதியை தீண் டாமைக் கொடுமைகளற்ற பகுதி யாக்குவதற்கான பணிகளில் ஈடுபடு மாறு தாங்கள் பணிக்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம். சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை குடிமக்கள் தமது சொந்த வாழ்வில் உணர்வதற்கு எதிராக சாதிய வன்  மத்துடன் நிகழ்த்தப்படும் குற்றங் களை ஒடுக்குவதற்கு அரசு நிர்வாக மும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல் படுவதை  தாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். சாதிய வன்கொடுமையில் ஈடு படுவோரும் அவர்களுக்கு உடந்தையானோரும் அரசியல்  சாசனத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாக கருதப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி, சேவை கள், இட ஒதுக்கீடு முதலானவற்றை அரசு திரும்பப்பெறுவது பற்றி பரி சீலிக்க வேண்டும். சாதிய மனோ பாவத்திலிருந்து மக்களை விடு விப்பதற்கான செயல்திட்டத்தை மாநில அரசு உருவாக்கிச் செயல் படுத்த வேண்டும். இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளனர்.