ஜெனீவா, ஜூன் 3- உலக வானிலை அமைப்பு (WMO), காலநிலை மாற்றம் வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற நீர் தொடர்பான ஆபத்துகளின் உலகளாவிய விபரத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று கூறியுள்ளது. உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2018- ஆம் ஆண்டில் 300 கோடி மக்கள் ஆண்டிற்கு ஒரு மாதமாவது போதுமான அளவு தண்ணீரைப் பெறவில்லை. 2050- ஆம் ஆண்டில், இது 500 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது. பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும், நன்னீராகவும் உள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து நிலைமை மோசமாகி வருகிறது.