ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய 2 நீதிபதிகள் அமர்வு
நீதிபதி சுதான்ஷு துலியா திட்டவட்டம்
புதுதில்லி, அக். 13 - கர்நாடகக் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப் பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதி பதிகள் ஒருவருக்கொருவர் மாறு பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். எக்கார ணம் கொண்டும் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று நீதிபதி சுதான்ஷு துலியா திட்டவட்ட மாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்த நிலையில், அமர்வில் இடம்பெற்றி ருந்த நீதிபதி ஹேமந்த் குப்தா ‘ஹிஜாப் புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என வும், மற்றொரு நீதிபதியான சுதான்ஷூ துலியா, ‘ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது’ எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால், ஹிஜாப் தடைக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கு, கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அல்லது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது. அதுவரை, ஹிஜாப்பிற்கு தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கலான 23 மனுக்கள்
ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லா மிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்விநிலையங் களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என 2022 மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. உயர்நீதி மன்றமும் ஹிஜாப் தடையை உறுதி செய்ததால், மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த னர். மொத்தம் 23 மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத் தில் நேரடியாக தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமர்வு செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் விசாரித்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், சஞ்சய் ஹெக்டே, தேவதத் காமத், பாட்ஷா உள்ளிட்டோரும், ஒன்றிய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜூம், கர்நாடக அரசுத் தரப்பில் அம்மாநில அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவட்கி யும் வாதிட்டனர். இந்த வாதங்களின் போது, மாணவி கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வருவதைத் தடுப்பது அவர்களின் கல்விக்கு பாதி ப்பை ஏற்படுத்தும் என்றும், வகுப்பறை களுக்குள் வேண்டுமானால் அவர்கள் ஹிஜாப் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என்று வாதங்களை எடுத்து வைத்தனர்.
வழக்கறிஞர்கள் வாதம்
வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிடு கையில், “இந்த உடையை உடுத்த வேண்டும் என்று ஒருவரை நாம் கட்டாயப் படுத்த முடியுமா?” என்று கேள்வி எழுப் பினார். உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூட பகடி (தலைப்பாகை) மற்றும் திலகம் ஆகியவற்றை அணிந்து பணியாற்று வதை சுட்டிக்காட்டினார். மூத்த வழக் கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதிட்ட போது, “பெண்கள் இந்த சமூகத்தில் மிகவும் பாதிப்பை சந்தித்து வருபவர் களாக உள்ளனர். அவர்களிலும் பலருக்கு கல்வி கிடைக்கும் சூழல் சரியாக அமைவ தில்லை. இந்த வழக்கில் கூட 6 பேரில் ஒருவர் ஓராண்டு கல்வியை இழந்துள்ளார். அவர் தனியார் கல்லூரியில் சேர்ந்துள் ளார். மற்ற 5 பேருக்கும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என எடுத்து ரைத்தார். “ஆடையை அணியாமல் இருப்பதும் உரிமைதானா” என நீதிபதி ஹேமந்த் குப்தா கேள்வி எழுப்பியபோது, “பள்ளிகளுக்கு யாரும் ஆடை அணியாமல் வருவ தில்லை” என்று வழக்கறிஞர் தேவதத் காமத் பதிலளித்தார். “பல மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு ருத்ராட்சமும் சிலுவை குறி கொண்ட செயின்களை அணிந்து வரு வதும் மதக்குறியீடுதானே.. என்றும் அவர் வாதிட்டார். அப்போது, “அது சட்டைக்குள் அணியப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை யாரும் சட்டையைத் தூக்கிப் பார்க்கப் போவதில்லை” என்று நீதிபதி ஹேமந்த் குப்தா கூறினார்.
வழக்கறிஞர் நிஜாம் பாஷா இஸ்லா மியச் சட்டங்கள் தொடர்பான வாதங்களை வைத்தபோது, இஸ்லாமியச் சட்டத்தின் ஆதாரங்கள் - குர்ஆன், ஹதீஸின் சுன்னா (நபியின் கூற்றுகள் மற்றும் மரபுகள்), இஜ்மா மற்றும் கியா ஆகியவற்றை விளக்கினார். கர்நாடக உயர் நீதிமன்றம் இஸ்லாமிய வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டே ‘ஹிஜாப் கட்டாயம் இல்லை’ என்று தீர்ப்பளித்து இருப்பதாக கூறினார்.
குரான் வசனங்கள் குறித்து தவறான வியாக்யானம்
“ஹிஜாப் அவசியம் என்பதை குர்- ஆனின் வசனம் ‘சூரா 24’ குறிப்பிடு கிறது” என்று எடுத்துரைத்த அவர், “ஹிஜாப் நடைமுறையைக் கடைப்பிடிக்கா தவர்களுக்கு குரானில் தற்காலிக தண்ட னைகள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால், ஹிஜாப் கட்டாயமில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கர்நாடக உயர்நீதி மன்றம் கூறியுள்ளது; ஆனால், பொது வாகவே, ஆன்மீக கீழ்ப்படியாமைக்கு குர்-ஆனில் தற்காலிக தண்டனைகள் இல்லை. மறுமைக்கால வாழ்க்கைக்கே அது தாக்கங்களை கொண்டிருக்கிறது. குர்- ஆனில் ஹிஜாப் விதிமீறலுக்கு மட்டு மல்ல, நமாஸ், ரோஜா (Namaz, Roza ) மீறலுக்கும் கூட தற்காலிக தண்டனைகள் இல்லை” என்பதை உச்ச நீதிமன்றத்திடம் கூறினார். தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மாறுபட்ட தீர்ப்பு
இந்நிலையில் வியாழனன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா வும், சுதான்ஷூ துலியாவும் ஒருவருக் கொருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஹிஜாப்பிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தடை சரி என்றும், எனவே, அந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பளிக்க, ஹிஜாப்பிற்கு தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவு செல்லாது என்று நீதிபதி சுதான்ஷூ துலியா, தனது தீர்ப்பில் மாறுபட்டுள்ளார்.
ஹிஜாப் தடையால் பாதிப்பு இல்லை : குப்தா
“மத ரீதியிலான உடையை மாணவி கள் அணிவது என்பது அடிப்படை உரிமை யில் வருமா? இஸ்லாத்தில் உடை அணியும் விவகாரம் என்பது கட்டாய மத பழக்க வழக்கங்களில் வருகிறதா? ஹிஜாப் தடை காரணமாக கல்வி எந்த வகையிலாவது பாதிக்கப்படுகிறதா? என்ற இந்த கேள்வி களுக்கு எல்லாம் ஒரே பதில் ‘இல்லை’ என்பதே ஆகும். எனவே, இந்த மேல் முறையீட்டு மனுக்களை நான் தள்ளுபடி செய்கிறேன்” என நீதிபதி ஹேமந்த் குப்தா கூறியுள்ளார். மொத்தம் 11 கேள்விகளை எழுப்பி அதனடிப்படையிலேயே, இந்த தீர்ப்பை அளித்துள்ளதாகவும் நீதிபதி குப்தா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
பெண் கல்வியே முக்கியம் : சுதான்ஷூ துலியா
அதேநேரம் நீதிபதி சுதான்ஷூ துலியா வழங்கியுள்ள தீர்ப்பில், “பெண் குழந்தை களின் கல்வி என்பது மிகவும் முக்கிய மானது. அந்த இலக்கில் எக்காரணம் கொண்டும் தடை வரக்கூடாது. இந்தியாவின் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். பெண்கள் பலர் வீட்டு வேலை பார்த்துவிட்டு, அதன்பின் கஷ்டப்பட்டு பள்ளிகளுக்கும் செல்கிறார்கள். அப்படிப்பட்ட பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை இந்த தடை மூலம் நாம் மேம்படுத்துகிறோமா என்பதை நாம் யோசிக்க வேண்டும். என் சக நீதிபதி ஹேமந்த் குப்தா மீது நான் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன். இருப்பி னும் இந்த வழக்கில் அவர் தீர்ப்பில் இருந்து நான் முரண்படுகிறேன். இந்த சமூகம் இனியும் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. எனவே, நான் கர்நாடக உயர் நீதிமன்ற த்தின் தீர்ப்பை ரத்து செய்து உள்ளேன். ஹிஜாப் மீதான தடையை நீக்கி உள்ளேன். இந்த தீர்ப்பின் போது, என்னுடைய மனதில் இருந்த கேள்விகள் எல்லாமே, ஹிஜாப் தடை காரணமாக மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்று மட்டுமே ஆகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “சட்டப்பிரிவு 19(1)(a), 25(1)-இன் படி ஹிஜாப் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதைத் தாண்டி அதில் வேறு ஒன்றும் இல்லை” என்று கூறி யுள்ள நீதிபதி சுதான்ஷூ துலியா “கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறையா இல்லையா? என்ற விசாரணைக்குள் சென்றதே தவறு” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிஜோ இமானுவேல் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி துலியா, “ஒரு பழக்கம் நடைமுறையில் உள்ளதா அது நிறுவப்பட்டதா, அது அங்கீகரிக்கப்பட்ட தா?” என்பதை மட்டுமே நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஹிஜாப் அணிதல் என்பது இந்த மூன்று புள்ளிகளையும் உள்ளடக்கி இருக் கிறது” என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
அரசியல் சாசன அமர்வில் விசாரணை?
நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷூ துலியாவின் இந்த மாறுபட்ட தீர்ப்பால், ஹிஜாப் வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு செல்ல வுள்ளது. அதுவரை ஹிஜாப்பிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவே தொடரும் என்பது குறிப்பிடத் தக்கது.
மாறுபட்ட கர்நாடக - கேரள உயர்நீதிமன்றங்கள்
இதற்கு முன்பு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப்பிற்கு தடை விதித்து தீர்ப்பளித்திருந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றம் ஹிஜாப்பிற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சுதான்ஷூ துலியாவின் சாதி என்ன? இணையத்தில் தேடிய சங்-பரிவாரங்கள்
ஹிஜாப்பிற்கு தடை விதித்தது செல்லாது என்று நீதிபதி சுதான்ஷூ துலியா அளித்த மாறுபட்ட தீர்ப்பை அடுத்து, சங்-பரிவார கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல துலியா வின் சாதி மற்றும் பின்னணி குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது அம்பலமாகி இருக்கிறது. வியாழனன்று இணையதள தேடுதலில் பெரும்பாலான நபர்கள் நீதிபதி சுதான்ஷு துலியாவின் சாதி என்ன? என்று தேடியுள்ளனர். கூகுள் தேடுதலின் முதல் 5 தேடுதல்களில் ஒன்றாக துலியாவின் சாதி குறித்த தேடல் இடம்பெற்று உள்ளது. இவை அனைத்தும் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே நடந்துள்ளது. இதனால் அவரது பெயர் கூகுள் டிரெண்டில் அவரின் பெயரும் இடம்பெற்று உள்ளது. துலியாவின் சாதி என்ன? என்று வெளிப்படையாகவும், அவ்வாறு அல்லாமல், துலியாவின் குடும்பப் பெயர் என்ன? என்று மறைமுகமாகவும் சங்-பரிவாரக் கூட்டத்தினர் தேடுதலை நடத்தியுள்ளனர். இதனால், நீதிபதி துலியா சம்பந்தப்பட்ட டேக்குகளில் சாதியும் ஒரு ‘கீ வேர்டா’க தானாக சேர்ந்து உள்ளது.