புதுதில்லி, செப். 19 - நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிர்க்கு 33 சத விகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், செவ்வாயன்று புதிய நாடாளு மன்றக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு முதல் அலுவலாக மக ளிர் இடஒதுக்கீடு மசோதாவை, ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். எனினும், மக்கள் தொகை கணக் கெடுப்புக்குப் பிறகே, இந்த மசோதா நிறைவேறும் என்பதால், 2024 மக்க ளவைத் தேர்தலில் மகளிர்க்கான 33 சத விகித இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்விக் கும் பதிலில்லை. இவ்வாறு எந்த தெளிவான விவ ரங்களும் இன்றி மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதன்கிழமையன்று இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் அறிவித்துள் ளார்.
ரகசியமாக வைக்கப்பட்ட மசோதா
செப்டம்பர் 18 துவங்கி 22 வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மொத்தம் 8 மசோதாக் கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டு நிறைவேற்றப்படும் என நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி தெரிவித்திருந்தார். மகளிர் மசோதா குறித்து அவர் எதுவும் தெரி விக்கவில்லை.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கு திடீர் ஒப்புதல்
இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் துவங்கி விட்ட நிலை யில், திங்களன்று (செப்.18) மாலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திடீரென ஒன்றிய அமை ச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும் சில முக்கிய மசோதாக்களுக்கு இக்கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தக வல்கள் வெளியாகின. குறிப்பாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை மற்றும் நீர்சக்தி துறை இணையமைச்சா் பிரகலாத் படேல் தனது டுவிட்டர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையிலேயே, செவ்வாயன்று புதிய கட்டடத்தில் கூடிய நாடாளு மன்றக் கூட்டத் தொடரில், மக்களவை யின் முதல் அலுவலாக மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
மசோதா மீது இன்று விவாதம்
இந்த மசோதா மீது புதன்கிழமை யன்று விவாதம் நடைபெறும் என்று அறி வித்த அவர், மகளிர்க்கு அதிகாரம் அளிக் கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப் படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு மசோதா ஏற்கெனவே இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்ட தாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த மசோதாவானது, மக ளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறை யில் மாற்றப்படும் வகையிலும், மக்க ளவையின் மூன்று பதவிக்காலங் களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந் தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. மாநிலங்களவையில் நாளை தாக்கல் மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.