2010-ல் தமிழ்நாடு மின்சார வாரியத்தை டான்ஜெட்கோ என்றும், டான்டிரான்ஸ்கோ என்றும் பிரித்தார் கள். தற்பொழுது கடன் பெறுவதற்காக டான்ஜெட்கோவை மேலும் மூன்று கம்பெனி களாக பிரிப்பதற்கான நடவடிக்கையை எடுக் கிறார்கள். அதாவது உற்பத்தி, விநியோகம், பசுமை மின்சாரம் என மூன்று வகையாக பிரிக்கிறார்கள். கம்பெனிகளாக பிரித்தால் கடன் எளிதில் கிடைக்குமாம். ஆனால் ஊழி யர்களின் நிலை அந்தோ பரிதாபம். ஏற்கனவே 2010-ல் மின்வாரியத்தை பிரித்த பொழுது நஷ்டத்தை குறைக்க முடியும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மின்வாரியத்தின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது. நட்டத்திற்கு யார் காரணம்? மின்வாரியத்தின் உற்பத்தி திட்டங்களை முழுவீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் நிர்ணயிக்கப்பட்ட காலஅளவை விட கூடுதல் காலம் எடுத்துக்கொள்வது, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள் முதல் செய்வது போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு பதிலாக அதிக அளவில் பணியாளர்கள் உள்ளனர் என சித்தரிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன? களப்பிரிவில் ஆரம்பகட்ட பணியிடங்களில் மட்டும் 32,000-க்கு மேல் காலிப்பணியிடங்கள். கூடுதல் பணிச்சுமையோடு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு மூலையில் தினம் தினம் மின்வாரிய தொழி லாளி மின்விபத்தில் மாண்டு போகிறார். அதே போல மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக மின்வாரியம் எடுத்து வருகிறது. தொழிற்நுட்ப வளர்ச்சி என்று கருதினாலும் தற்போது சுமார் 3 கோடியே 10 லட்சம் மின் இணைப்புகளில் ஏப்ரல் 2025-க்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ. 3 ஆயிரம் கோடி செலவு செய்வது மின்வாரியத்தின் நட்டத்தை எந்த வகையில் குறைக்கும் என்பது புரியாத புதிர். அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் மின்வாரியத்தில் 60,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 80,000-ஐ நெருங்கும். தற்போது இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் 2 ஆண்டுகள் கழித்து வரும் பணியாளர்களுக்கு தொழில்நுட்பங்களை கற்றுத்தர இயலாத நிலை ஏற்படும். இதனால் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறைக்கு செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படும். இதைத் தான் வாரிய நிர்வாகம் விரும்புகிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டிய தமிழக அரசு, பொதுத்துறை நிறுவனமான மின்வாரி யத்தை சேவை துறையான மின்துறையை மற்றத்துறைகளோடு ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமல்ல. இதை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் மின்வாரிய மண்டல தலைமைப்பொறி யாளர் அலுவலகம் முன்பு 2023 செப்டம்பர் 21 அன்று தர்ணா போராட்டத்தை மின் ஊழியர்கள் நடத்துகின்றனர்.
எஸ்.ராஜேந்திரன்,
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு)