states

நவம்பர் 1 வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக்.28- தமிழ்நாட்டில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆம் தேதிகளில்  பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதி களின் மேல் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக அக்.29 அன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பா லன இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாத புரம், தேனி, தென்காசி, தூத்துக்குடி  ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்.30 மற்றும் 31  ஆகிய தேதி  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும் பகுதி இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாத புரம், தேனி,தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், ராணிப் பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தென்காசி, நெல்லை, கன்னி யாகுமரி, தேனி, திண்டுக்கல் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.