states

உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி கேட்டும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்?

சென்னை, நவ. 16 – குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  குஜராத் மோர்பி பகுதியில் உள்ள 150 ஆண்டுகால பழமையான தொங்குபாலம் அக்டோபர் 30ஆம் தேதி அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். பால  பராமரிப்பு பணிகளில் முறைகேடு நடந்த தாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பான பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பாலத்தை பராமரித்து நிர்வகி க்கும், ஒப்பந்தம் ஒரேவா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததை நீதிபதி சுட்டிக் காட்டினார். ஆனால் ஒப்பந்தம் காலாவதி யான பிறகும் டெண்டர் கோராமல், மீண்டும் அதே நிறுவனம், ஒப்பந்தத்தை தொடர அனுமதித்து பெரும் தொகை வழங்கப்பட்டது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த ஒப்பந்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு மாநில அரசு, தாராளம்  காட்டியதாக கண்டனம் தெரிவித்த நீதி மன்றம், உரிய பதில் அளிக்க உத்தர விட்டுள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் பரம், நீதிமன்றம் தெரிவித்த கண்டனம், ஆளும் பாஜக அரசுக்கு கிடைத்த வெகு மதி என விமர்சித்துள்ளார்.  பாலம் விபத்தில் குஜராத் உயர்நீதி மன்றம் அடுக்கடுக்கான கேள்விகளால் மாநில அரசை அம்பலப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் பிறகு அமைச்சரவையில் தொடர நகர்புறத்துறை அமைச்சருக்கு என்ன உரிமை இருக்கிறது. மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றம் அம்பலப்படுத்தியும், மன்னிப்போ, துறைசார் அமைச்சர் நீக்கமோ என எந்த நட வடிக்கையும் இல்லை என அவர் குறிப் பிட்டுள்ளார்.