சுதந்திரத்திற்காக எந்த பாஜககாரர் தூக்கில் தொங்கினார்?
‘நாட்டை என்னால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்; எவர் ஒருவரும் என்னைத் தொட முடியாது என்றெல் லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். ஜனநாயகத்தை மதிக்கும் யாரும் இப்படி பேச மாட் டார்கள். 100 மோடிகள் அல்லது அமித் ஷாக்கள் வந்தாலும் 2024-இல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும். சுதந்தி ரத்திற்காக வாழ்வை தியாகம் செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்; பாஜகவினர் அல்ல. சுதந்திரத்திற்காக பாஜக தலைவர்கள் யாரும் தூக்கில் தொங்கவில்லை; சிறைக்குச் செல்லவில்லை. மாறாக சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை கொன்றார்கள். அப்படிப்பட்டவர்கள் நாட்டுப்பற்று குறித்து பேசலாமா?’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அனல்மின் நிலையங்களை முழுத் திறனுடன் இயக்க உத்தரவு!
பிப்ரவரி 20 அன்று, உச்சபட்ச மின்தேவை 205.52 ஜிகாவாட்டாக அதிகரித்தது. அன்றைய தினம் 4 ஆயி ரத்து 281 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. எனவே, மின்சார தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டாடா பவர், அதானி மின்நிலையங்கள், எஸ்ஸார் மின் உற்பத்தி நிலையம், ஜே.எஸ்.டபிள்யூ ரத்னகிரி, மீனாட்சி எனர்ஜி உள்பட 15 அனல்மின் நிலையங்கள், தங்களது முழு உற்பத்தித் திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின்தேவை 230 ஜிகாவாட்டாக உயரும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
தில்லி துணைமுதல்வரை கைது செய்ய மோடி அரசு முடிவு?
மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அவரை பிப்ரவரி 26-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அப்போது அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர் பாக, ஏற்கெனவே 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப் பட்டதுடன், மணீஷ் சிசோடியா மற்றும் 14 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டில் எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாசிசத்தை தோற்கடிக்க முடியும்
வறுமை, கல்வியறிவின்மை, பணவீக்கம் உள்ளிட்ட உண்மையான பிரச்சனைகளை பாஜக அரசு மூடி மறைக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு குறு, சிறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலமில்லாத விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதுபோன்ற உண்மையான பிரச்சனைகளை மறைக்க ஆளும் பாஜக மத வெறுப்புணர்வை தூண்டி வரு கிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டால் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக-வை தோற்கடிக்க முடியும். அமைதி, ஒற்றுமையை விரும்பும் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும். இதன்மூலம் பாசிசத்தை தோற்கடிக்க முடியும்.
நாடாளுமன்ற சிவசேனா அலுவலகமும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு!
மகாராஷ்டிராவில் உண்மையான சிவசேனா யார்? என்பதில் உத்தவ் தாக்கரே அணிக்கும், ஷிண்டே அணிக்கும் இடையிலான பிரச்சனையில், கடந்த 17-ஆம் தேதி யன்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமை யிலான சிவ சேனாவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்கி யது. இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனாவின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் ராகுல் ஷெவாலே கடந்த 18-ஆம் தேதியன்று கட்சிக்கான அலுவலகத்தை ஒதுக்கக் கோரி மக்களவை செயலகத்துக்கு கடிதம் எழுதினார். அதன் பேரில், நாடாளுமன்றக் கட்டடத்தில் சிவ சேனா அலுவல கத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மோடி அரசு பதிலளித்துள்ளது.
உ.பி. மக்களிடம் கனவுகளை விற்பனை செய்கிறது பாஜக!
“ஏழை மக்களின் வீடுகள் அதிகாரிகளால் புல்டோசர் செய்யப்படும் படங்களை உலகமே பார்த்தது. பிபிசி போன்ற ஒரு நிறுவனத்தில் பாஜக சோதனை நடத்தி ஊட கங்களை மிரட்டினால், உலகம் முழுவதும் உள்ளவர்கள் நாட்டில் முதலீடு செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கி றீர்களா? ஆனால், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 40 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகள் வரும் என்று பாஜக மக்களுக்கு கனவுகளை விற்பனை செய்கிறது. இன்றைக்கு புற்று நோயால் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் (பாஜகவினர்) கேன்சர் இன்ஸ்டிட்யூட் கட்ட மாட்டார்கள்... மருத்துவமனை கட்ட மாட்டார்கள்.. ஆனால், சொந்த விருப்பத்திற்காக கோயில் கட்டுவார்கள்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் விமர்சித்துள்ளார்.
‘விலை’ பற்றி பிரதமர் வாய் திறப்பாரா?
“அதானி குழுமம் தொடர்புடைய போலி நிறுவனங்க ளின் பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ சிறிது கால மாக கண்காணித்து வந்ததாக எங்களுக்கு தெரியும். அந்த விசாரணையின் நிலவரம் என்ன?. மேலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், ஒரு ரஷ்ய நிறுவனத்துக்கும் இடையே சந்தேகத்திற்கு இடமான பண பரிமாற்றம் நடந்துள்ளது. எண்ணெய்க்காக ரஷ்ய நிறுவனத்துக்கு பொதுத்துறை நிறு வனங்கள் அதிக விலை கொடுத்துள்ளன. அதற்கு பிரதி உபகார மாக, மற்றொரு எரிசக்தி வளத்துக்காக அரசியல் தொடர்புடைய ஒரு இந்திய தனியார் நிறுவனத்துக்கு அந்த ரஷ்ய நிறுவனம் அதிக விலை கொடுத்துள்ளது. இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்” என்று காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய் காணொலி மூலம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவ லர்களுடன் புதனன்று மாலை ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் புகார்கள் தொடர்பாக, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீமான் விளக்கம் அளிப்பாரா?
அருந்ததியர் மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிப்பார் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். “அருந்ததியர் மக்களைப் பற்றி சீமான் எதுவும் தவறாக பேச வில்லை என்றும், வந்தேறிகள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. வரலாற்றை மட்டும் தான் கூறினார். சில பேர் அதைத் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்றும் அவர் சமாளித்துள்ளார்.
அனுமதியின்றி ஊர்வலம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
சென்னை,பிப்.22- சென்னையில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மேலும் அங்கிருந்து மெழுகுவர்த்தி ஏந்தி போர் நினைவுச் சின்னம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்வில் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், தடா பெரிய சாமி, வினோஜ் பி.செல்வம், மூத்த ராணுவ அதிகாரி நாராயணன், கர்னல் பாண்டியன், மேஜர் மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனு மதியின்றி ஊர்வலம் நடத்திய அண்ணா மலை உள்ளிட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரயில்களில் பாலியல் சீண்டல் : காவல்துறை எச்சரிக்கை
சென்னை,பிப்.22- ரயில்வே ஊழியர்கள் ரயில் பயணி களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடு வோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே காவல்துறையின் கூடுதல் டிஜிபி வனிதா கூறினார், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 16 ஆம் தேதி தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணியிலிருந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், புனலூரை சேர்ந்த அனீஸ் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். இவர் மேல் கொல்லம் மாவட்டம் குன்னாகோட்டை காவல் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். ரயிலில் பயணம் செய்யும் பயணி கள், குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் களில் ஈடுபட்டாலோ அல்லது ரயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என அவர் எச்சரித்தார்.
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு
சென்னை,பிப்.22- தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ெஜட்) தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து துறைவாரி யாக ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ள நிலையில் மார்ச் முதல் வாரத்தில் அமைச்ச ரவை கூடும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை கூடும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத் தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனி வேல் தியாகராஜன் பட்ெஜட்டை தாக்கல் செய்வார்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கர்னல் பாண்டியன் மீது வழக்குப் பதிவு
சென்னை, பிப். 22- தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பாபு அண்மையில் அவரது உறவினர்க ளால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்டு சிலர் கைது செய்யப்பட் டுள்ளனர். இதைக் கண்டித்து சென் னையில் பாஜக சார்பில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ராணுவ வீரர்கள் துப்பாக்கியை சுடத் தெரிந்தவர்கள்; வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதில் கை தேர்ந்தவர்கள், ராணுவ வீரர்கள் தொடர்ந்து கொல் லப்பட்டால் நாங்கள் வெடிகுண்டு வைப்போம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். இதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம் என்றார். கர்னல் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில் தமிழ நாட்டை வன்முறைக் களமாக்க, சமூக அமைதியைக்கெடுக்க, தொழில் முதலீடுகளை தடுக்க நண்பர் அண்ணாமலை செய்யும் மக்கள் விரோத அரசியலின் ஒரு கருவிதான் இந்த முன்னாள் ராணுவ வீரர். முள் மரத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தேசப்பது காப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன் மீது காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை
சென்னை,பிப்.22- சென்னை அண்ணாசாலையில் புதனன்று (பிப்.22) காலை 10 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறி யடித்துக் கொண்டு வெளி யேறினர். இந்நிலையில், சென்னை யில் நில அதிர்வு எதுவும் ஏற்பட வில்லை என்று நில அதிர்வுகளை ஆராயும் ஒன்றிய அரசின் தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள் - புடின்
மாஸ்கோ, பிப்.22- ரஷ்யாவின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று தப்பாகக் கற்பனையை ஓட விட்டுவிட்டார்கள் என்று ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான சிறப்பு நடவடிக்கை யைத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஷ்யாவின் பொரு ளாதார நிலையாக இருப்பதை புடின் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பேரியல் பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் கொண்ட புடின், 134 கோடி அமெரிக்க டாலர்களை பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கினார். இது ரூபிளின் மதிப்பை நிலையாக வைத்ததோடு, சரிந்திருந்த அதன் மதிப்பினை மீட்கவும் உதவியது. இது குறித்துப் பேசிய புடின், “உக்ரைன் மீதான நடவடிக்கை தொடங்கியபோது, ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீது இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதன் பொருளாதாரம் 25 விழுக்காடு அளவுக்கு சரியும் என்று கணித்தார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டில் வெறும் 2.1 விழுக்காடுதான் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது” என்றார். உலக அளவிலான மந்த நிலையால் பல் வேறு நாடுகளில் இதை விட மோசமான சரிவு ஏற்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகள் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் எங்கள் மீது தாக்குதல் தொடுத்தன என்று குற்றம் சாட்டிய புடின், “ஆனால் அவர் களின் முயற்சிகள் எதுவும் வெற்றிபெற வில்லை. மேற்கத்திய நாடுகள் நினைத்த தைவிட வலுவான பொருளாதாரமாக ரஷ்யா இருக்கிறது. அதோடு, இது போன்ற தாக்குதல்கள் ரஷ்யாவைப் பாதிப்பதை விட, அவர்களுக்குதான் கூடுதல் பாதிப்பு என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.