தமிழ்நாட்டில் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல், சமூகப்பணி, கணினியியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப் பணியாளர் கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன.
இதனைத் தவிர்த்து பாரதி தாசன் தொலைநிலைக் கல்வி மையம் பல்கலைப் பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் திருவெறும்பூரி லும் இயங்கி வருகின்றன. மேலும், டெல்டா மாவட்டங்களான புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரி யலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையங்கள் என 123 கல்லூரி களில் ஆட்சி செலுத்தி வருகிறது. அதில் 120 கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற் றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் தன் னாட்சி நிறுவனங்களாக செயல் பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழக உறுப்புக் கல் லூரிகளையும் நடத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவர்கள், விவசாயம் மற் றும் தினக்கூலி சார்ந்த குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள் தான். மிகப் பெரிய ஆளுமையும் கடமையும் பொறுப்பும் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுமார் 3 ஆண்டு களாக, கிட்டத்தட்ட 5 லட்சம் மாண வர்களுக்கு பட்டம் வழங்காமல் இருக்கிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, “மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு தமிழ்நாடு ஆளுநரும் பாரதிதாசன் பல்க லைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி உரிய அனுமதி வழங் காமல் இருக்கிறார்” என்கின்றனர். ஏழை மாணவர்களின் மருத்து வக் கனவை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவில் கையெழுத்திடாமல், மாணவர் களின் உயிரை பறிக்கும் தமிழ் நாட்டின் ஆளுநர், தற்போது பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த ஏழை,எளிய மாண வர்களுக்கு முறையாக பட்ட மளிப்பு விழா நடத்த அனுமதி தரா மல் கால தாமதம் செய்கிறார். இதனால் பட்டம் படித்த மாண வர்களுக்கு உரிய பட்டம் கிடைக்கா மல் உள்ளது. இதன் விளைவாக, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கா மல் கூலி வேலைக்குச் சென்று வரு கின்றனர். இது மாணவர்களின் எதிர் காலத்தை மிகவும் பாதித்து, அவர் களை மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறது. எனவே தமிழக அரசு உயர் கல்வித்துறை இதில் தலையிட்டு, மாணவர்களின் எதிர் காலத்தை பாதுகாக்கும் வகை யில், படித்து முடித்து 3 ஆண்டு களாக காத்திருக்கும் 5 லட்சம் மாண வர்களுக்கு உடனடியாக பட்டம ளிப்பு விழா நடத்த வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் மாணவர்களுக்கு பட்ட மளிப்பு விழா நடத்த வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆக.30 அன்று, பல்கலைக்கழ கத்தின் நுழைவு வாயில் முன்பு பட்டம் விடும் போராட்டம் நடை பெறும்.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன்குமார், மாவட்டத் தலைவர் சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை