states

முத்திரைத்தாள் கட்டண உயர்வு: பதிவுத்துறை விளக்கம் என்ன?

சென்னை,ஏப்.24- தமிழ்நாட்டில் 65 வகையான முத்  திரைத்தாள் ஆவணங்கள் இருக்கின் றன. இதில் 20-க்கும் மேற்பட்ட  சட்டப்பூர்வ ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வைக் கட்ட ணத்தை உயர்த்தும் சட்டமுன்வடிவு  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுக நிலையிலேயே எதிர்த்தது.   கூட்டத்தொடரின் இறுதி நாளில் நடந்த விவாதத்தின்போதும் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி, “இது, சாதாரண மக்களைப் பாதிக்கும் வகையில் கொண்டுவரப் படுகிறது. வாரிசு மற்றும் உறுதி மொழி முத்திரைத்தாள் எல்லா  தரப்பினர்களாலும் பயன்படுத்தப் படுகிறது. எனவே, திடீரென உயர்த்து வதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார். இதற்கு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ``இந்திய முத்திரைச் சட்டம்  1899 இன் படி பொதுமக்கள் வணிக  நிறுவனங்கள், வங்கிகள் பயன்படுத் தும் ஆவணங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை நிர்ண யம் செய்யப்படுகிறது. சில ஆவணங்களுக்கு 1992 ஆம் ஆண்டும், சில ஆவணங்களுக்கு 2001 ஆம் ஆண்டும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக  முத்திரைத் தீர்வை மாற்றியமைக் கப்படவில்லை. 65 வகையான ஆவணங்களில் வங்கி, நிறுவனங்கள் பயன்படுத்தும் 15 ஆவணங்களுக்கு மட்டுமே முத்திரைத் தீர்வை மாற்றி யமைக்கப் படுகிறது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் ஆவணங்களில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முத்திரைச் சட்டம் 2013 மற்றும் 2019 என இருமுறை இயற்றப் பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புத லுக்கு அனுப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்டன. அதிமுக கொண்டு வந்த சட்டத் தோடு ஒப்பிடுகையில் 5 வகையான ஆவணங்களுக்கு குறைவான முத்திரை விகிதமும், 4 வகையான ஆவணங்களுக்கு அதே விகிதமும், 6 வகையான ஆவணங்களுக்கு சிறிது அதிக விகிதமும் முன்மொழி யப்பட்டுள்ளது. இந்த உயர்வு அதிமுக ஆட்சியில் முன்மொழியப்பட்டவை தான். எனவே, திமுக ஆட்சிதான் கொண்டு வந்திருக்கிறது என சொல் வது தவறான கருத்து”என்றார். பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

 விலை மாற்றம் என்ன?

சொத்து பரிமாற்றம் செய்தல், ஒப்பந்தத்தை ரத்து செய்தல், நிறுவனங்கள் பதிவுச் சட்டத்தின் கீழான  ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கான முத்திரைத்தாள் கட்டணங்கள் அதிக ரிக்கப்பட்டுள்ளன. இறந்த குடும்ப  உறுப்பினருக்கான சட்டப்பூர்வ வாரிசுகளுக்கான சொத்துக்குரிய முத்திரைத் தாள் ரூ.100 லிருந்து  ஆயிரம் ரூபாயாகவும், உறுதிமொழிக் கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200ஆகவும், ஆவணங்களின் நகல் பிரதியைப் பெறுவதற்கான முத்திரைத்தாள் கட்ட ணம் ரூ.20லிருந்து ரூ.500, அடமானம்  பத்திரத்திற்கு ரூ.100-ரூபாயிலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய், அறக்கட்டளை ஆவணங்களுக்கு ரூ.200லிருந்து ரூ.1000 உயர்த்தப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான பரிவர்த்தனை களுக்கான தீர்வுக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.அதாவது, தனிநபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கு  இடையிலான கட்டணங்கள் அதிகரிக் கப்பட்டுள்ளன. பிரமாணங்கள், குத்தகை, கடன்கள், காப்பீட்டு பாலீசி  உள்ளிட்ட அம்சங்களுக்கும் முத்தி ரைத் தாள் கட்டணம் அதிகரிக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில், ஆண்டொன் றுக்கு 50,000 கோடி வரை முத்திரைத் தாள் அச்சிடுவதற்கு செலவாகிறது.ரூ. 10 முத்திரைத் தாளுக்கும், ரூ.5000 மதிப்பிலான முத்திரைத்தாளுக்கும் அச்சிடும் செலவு ஒன்றுதான். எனவே  கடந்த 20 ஆண்டுகளாக விலை மாற்றப்படாமல் இருந்ததைக் காலத்தின் தேவை கருதி மாற்றி யிருக்கோம். குறிப்பாக, மக்கள் தின மும் பயன்படுத்தப்படும் ஆவணங்க ளுக்கு எந்த விலை ஏற்றமும் இல்லை.  அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் சான்றிதழ் நகல் மட்டுமே விலை ஏற்றம்  செய்யப்பட்டுள்ளது. ஆனால்,இது பெரிய பாதிப்பைத் தராது. விலை ஏற்றமிருந்தாலும் ரூ.20, ரூ.50 முத்திரைத்தாளும் சார்பதிவாளர் அலுவலத்தில் கிடைக்கும். இன்னும் இதை எளிமையாக்கவும் அச்சிடும் செலவைக் குறைக்கவும் இ-ஸ்டாம்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டமும் இருக்கிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.