- இந்தியா ஒரு வேளாண்மை நாடு. 60% மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள். 2014 முதல் 2022 வரை 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றவியல் புள்ளி விபர அமைப்பு தெரிவிக்கிறது. அதாவது, மோடி ஆட்சியில் சராசரி நாள் ஒன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்- தி ஒயர்- 18.12.23)
- 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 2012-13க்கும் 2018- 19க்கும் இடையில் உண்மையான வருமானம் 1.4% குறைந்துள்ளது.
- எல்லா விவசாயிகளுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வட்டி இல்லா கடன் தரப்படும் என மோடி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அது நிறைவேற்றப்படவில்லை.
- விவசாய பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தனி ரயில்வே இணைப்பு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
- இந்தியா முழுவதும் நீர்ப் பாசன வசதி செய்யப்படும் என்ற உறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
- விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.3லட்சம் கோடி வருவாயை இழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
- சிறு-குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
- விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை இப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவு + 50% என கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
- குறைந்தபட்ச விலை முறையாக நிர்ணயிக்கப்படாததால் 2000 முதல் 2007 வரை மட்டும் ரூ.45 லட்சம் கோடி இழப்பு என ஓர் அறிக்கை (OCED-ICAIR) தெரிவிக்கிறது.
- இந்தியா உலக வறுமை குறியீட்டில் 125 நாடுகளில் 111-ம் இடத்தை எட்டி விட்டது.
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு உடனே சம்பளம் கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. ஆதார் இணைப்பால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டத்தை சீர்குலைக்கிறது அரசு.
- வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி காணாமல் போய்விட்டது.
- தொழிலாளர்கள் நல சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.
- அரசாங்கத்தில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. குத்தகை பணியாளர்களை நியமித்து இடஒதுக்கீட்டை செல்லா காசாக்கி வருகிறது பா.ஜ.க அரசு. குறைந்தபட்ச ஊதியம் அமலா
- க்கப்படவில்லை. தொழிலாளர்கள் அன்றாடங் காய்ச்சிகளாக தவிக்கின்றனர்.