திருமலை, மே 8- திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத னால் ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் நடக்கும் வாராந்திர சேவைகளான அஷ்டதள பாதபத்ம ஆராதனை, திருப்பாவாடா, நிஜபாத தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு தடை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேற்று மத பிரச்சாரங்களை குறிக்கும் விதமான படங்கள், துண்டு பிரசுரங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள், கட்சி கொடிகள் திருமலைக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில பக்தர்கள் இதையறியாமல் தங்கள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்தும், ஸ்டிக்கர் ஒட்டியும் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய வாகனங்களை அலிபிரி சோதனைச்சாவடியில் உள்ள தேவஸ்தான பாது காவலர்கள் நிறுத்தி, அதுபற்றி பக்தர்களுக்கு தெரிவித்து அகற்றி வருகின்றனர்.