states

img

வெண்மணி நினைவை நெஞ்சில் ஏந்தி கல்வி காக்க போராடுவோம்! - இரா.ஹரிசுர்ஜித்

ஆண்டுகள் 54 ஆனாலும் இன்னும் அணையாத நெருப்பாய் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் வீர வரலாற்றுக் காவியம் வெண்மணி. கீழவெண்மணி தியாகிகளின் நினைவாக இந்திய மாண வர் சங்கத்தின் சார்பாக தேசிய கல்விக்  கொள்கைக்கு எதிராகவும், தேசிய அளவிலான நீட், க்யூட் போன்ற தேர்வுகளை ரத்து செய்ய கோரியும், இந்தி திணிப்பை எதிர்த்தும், கல்வி நிலையங்களில் சாதிய மதவாத கருத்துக்களை புகுத்துவதற்கு எதிராக வும், சிறப்பு கருத்தரங்கம் தேவூர் ஜீவா திருமண மண்டபத்தில் 24.12.2022 (சனிக்கிழமையன்று) மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.  மாணவர்கள் மத்தியில் அவர்களது மனதில் வீரவெண்மணியின் வர லாற்றை பதிய வைப்பது சித்தாந்தத் தெளிவு பெறுவதற்கும், மக்கள் மீதான அக்கறையை அதிகரிப்பதற்கும், சுரண் டலில் இருந்து தேசத்தை பாதுகாப்ப தற்கும் மிகுந்த உதவிகரமாகயிருக்கும்.

இன்றைய கல்வி சூழ்நிலை

கல்வித் துறையை முழுக்க முழுக்க தனியார் முதலாளிகளிடம்; கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்த்து விட்டு முற்றிலும் வணிகமயமாக மாற்றி இருக்கிறது பாஜக அரசு. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூல மாக இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழ கங்களில், கல்வி நிலையங்களில் க்யூட் என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை கொண்டு வருவது; கிராமப்புற மாணவர்களுக்கு எந்த வகையிலும் கல்வி கிடைக்கப்பெறாத வகையில், உயர் கல்வியும் அவர்கள் பெற்று விடக் கூடாது என்ற நயவஞ்சகத்தோடு செயல்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆளுநரை கையில் வைத்துக்கொண்டு  தேசிய கல்விக் கொள்கையை பரப்புவ தற்கும் அதன் சாராம்சங்களை கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலங்களில் அமல்படுத்துவதற்கும் முனைகிறது ஒன்றிய பாஜக அரசு.

மாநில  உரிமைகள் பறிப்பு

நாடு முழுக்க இருக்கக்கூடிய உயர் கல்வி நிறுவனங்களில், அனைத்து பல்கலைக்கழகங்களில் யுஜிசியின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார்  மனுஸ்மிருதி, புராணங்கள், இதி காசங்கள், வேதங்கள் சம்பந்தமான பிற்போக்குத்தனமான கருத்துக்களை முன்னிறுத்தி கருத்தரங்கம் நடத்துவ தற்கு மாநில ஆளுநர்களுக்கு அறி விப்பு செய்கிறார். தமிழகத்தில் கல்வி நிலையங்க ளுக்கு செல்லக்கூடிய ஆளுநர் உரை யாற்றும்போது சிலப்பதிகாரம், மணி மேகலை, திருக்குறள் போன்ற இலக்கிய நூல்களை தவறாக பேசுவ தும் அதை பிற்போக்குத்தனமான பழமைவாத கருத்தோடு ஒப்பிட்டு மாணவர்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சனாதன கருத்துக் களை விஷவிதைகளாக தூவி மாண வர் சமூகத்தை தவறான பாதைக்கு திசை திருப்பி வருகிறார். 

இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சீரழிக்கும் நடவடிக்கை களில் ஈடுபடுகிறார். மாணவர்களின் -இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கக் கூடிய ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் உயிர்கள் பறிபோகக் காரணமாகியுள்ளார்.  இத்தகைய பின்னணியில் தேசம் காக்க, நாட்டின் பன்முகத்தன்மையை யும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மாணவர் சமூகத்தை மேம்படுத்த கல்வி மற்றும் வேலையை அடிப்படை உரிமை யாக்கி வென்றெடுக்க வெண்மணி தியாகிகளின் வீரவரலாற்றின் பாதை யில் சமரசமற்று போராட வேண்டியது காலத்தின் தேவையாகும்.