சென்னை,நவ.29- பார்முலா-4 கார் பந்தயம் நடத்து வதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. பார்முலா 4 இந்தியன் சாம்பி யன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் போட்டிகள் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறு கிறது. இந்த நிலையில் கார் பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுக் கோட்டையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹாரிஸ் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதில், ‘கார் பந்தயத்தை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிர தான இடத்தில் நடத்துவதால் பெரிய அளவில் அசவுகரியம் ஏற்படும். பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையகம் ஆகியவை உள்ளன’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு புதனன்று (நவ.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னையில் நடை பெறும் பார்முலா 4 கார் பந்தயத் திற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இந்த பந்தயம் ஏற்கெனவே நொய்டா, ஹைதரா பாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது. இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வ தேச அளவில் வர்த்தகம் நடைபெறும்” என அரசு தரப்பில் விளக்கமளிக்கப் பட்டது. இதையடுத்து கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.