“கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மை யுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பையும் நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவே தான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமைகளிலிருந்து, அதாவது, பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, மகிழ்ச்சியும் நிறைவும், ஆரோக்கியமும் சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு, இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக, எங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை. லாபம், லாபம், மீண்டும் லாபம்! இதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அமைப்பு, மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற ஒரு அமைப்பு மனிதத் தன்மை அற்றதாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு ஒரு கம்யூனிஸ்டுக்கு, மக்களின் மனிதத் தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது, சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை. எனவேதான், நிறைவும் சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில், தங்கள் முழு வலிமையை பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின் வாங்குவதில்லை!” எழுத்தாளர், பத்திரிகை யாளர், கம்யூனிஸ்ட் போராளி, நாஜிக்கள் எதிர்ப்பில் முன்னணித் தலைவர் எனப் புகழ்பெற்றவர் செக்கோஸ்லே வாகியாவின் ஜூலியஸ் பூசிக்.
இன்று ஜூலியஸ் பூசிக் நினைவு நாள்