states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ககன்யான் திட்டத்திற்கு விகாஷ் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி,ஏப். 7- நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இங்கு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு செயற்கைகோள்களை கொண்டு செல்லும் விகாஷ் என்ஜின் தயாரிக்கும் பரிசோதனை வியாழக்கிழமை இரவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த என்ஜின் சோதனை 240 வினாடிகள் நடைபெற்றது. இந்த சோதனையானது இஸ்ரோ தலைவர் சோமநாத், உந்தும வளாக இயக்குனர் ஆசீர் பாக்யராஜ், விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் உன்னி கிருஷ்ணன், திரவ இயக்க வளாக இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் கட்டன் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த சோதனை  வெற்றிகரமாக நடைபெற்றதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரவைத் தலைவரை அவமதித்த அதிமுக

 சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(ஏப்.6) மாலை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய  கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது.   அப்போது பேசிய திமுக உறுப்பினர்கள் அணைக்கட்டு நந்த கோபால், பூம்புகார் நிவேதா முருகன்  ஆகியோர் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நியாய விலை கடை களில் தர மற்ற அரிசி வழங்கப்பட்டது என்று குற்றம்சாட்டினர்.  இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம் தர அக்கட்சியின் கொறடா எஸ்.பி. வேலு மணிக்கு பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் அவரால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர முடியவில்லை. முன்னாள்  அதிமுக அமைச்சர் காமராஜ் பேச வாய்ப்பு கேட்டார். மானிய கோரிக்கை விவாதத்தில் அடுத்ததாக அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் பேச  உள்ளதால் அவர் மூலம் விளக்கம் தர லாம் என்றும்  அப்பாவு தெரிவித்தார்.  இதனை ஏற்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து  வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த பேரவைத் தலைவர், அதிமுக உறுப் பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் வாய்ப்பு வழங்கி இருக்கிறேன். ஒரு வருக்கு சராசரியாக 32 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது.  இந்த நிலையில் எதிர்க்கட்சி கொறடா வேலுமணி தெரி வித்த கருத்து விந்தையாக இருக்கி றது என்றார். அப்போது குறுக்கிட்ட பாஜக சட்ட மன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து சபை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அதிமுக உறுப்பி னர்கள் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பேரவை தலைவர் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் வரவில்லை. 

மாணவர்களுக்கு  உதவித்தொகை: அமைச்சரிடம் மனு

சென்னை, ஏப்.7-  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றகுழுத் தலைவர் நாகைமாலி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.  அந்த மனுவில், தமிழ்நாடு முழுவது முள்ள அரசு மருத்துவக் கல்லூரி களில் பயிலும் துணை மருத்துவ மாண வர்கள், பயிற்சி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை பரிசீலனை செய்து உதவித் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்” என்று கூறி யிருந்தார்.  பரிசீலனை செய்து உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் 

சென்னை, ஏப்.7-  சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஈரோடு உள்ளிட்ட சில நகரங்களில் 110 டிகிரியை  தாண்டி கொளுத்துகிறது. இந்த நிலையில், ஏப்.8 முதல் வருகிற 11 ஆம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பில்  இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணை அதிகாரியாக பெ.அமுதா நியமனம்

சென்னை, ஏப். 7 - அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பான புகார்களை விரிவாக விசாரணை நடத்த ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாச முத்திரம், கல்லிடைக்குறிச்சி காவல்  நிலைய குற்ற எண் 69/2023 தொடர்புடை யவர்களின் பற்களைப் பிடுங்கி உதவி  கண்காணிப்பாளர் பல்வீர் சிங் துன்புறுத் திய தகவல் வெளியானது. இதனை யடுத்து சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டு, பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட் கோட்டத்தில் பணியாற்றிய காவலர்கள் எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன், ராஜ்குமார், போகபூமன், ஆய்வாளர்கள் சந்திரசேகரன், பி.ராஜகுமாரி, ஏ.பெரு மாள், சார் ஆய்வாளர் என்.சக்தி நடராஜன்  ஆகியோர் ஆயுதப் படைக்குப் பணி யிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பான விசா ரணை அறிக்கையை சாராட்சியர் ஏப்.3  அன்று மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப் பித்துள்ளார். அறிக்கையை ஆய்வு செய்த ஆட்சியர், உயர்நிலை அதிகாரி  தலைமையில் விசாரணைக்கு உத்தர விட அரசுக்கு பரிந்துரை செய்தார். எனவே, விரிவான விசாரணை நடத்த  பெ. அமுதாவை உயர்மட்ட விசா ரணை அதிகாரியாக நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அவர் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் குழப்பத்திற்கு டிரம்ப் காரணம்

பைடன் நிர்வாகம் குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஏப்.7- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுகையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்தான் காரணம் என்று ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கப் படைகள், தங்கள் கட்டுப்பாடு தகர்க்கப்பட்ட காரணத்தால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தன. தலிபானுக்கு எதிராகத்தான் அந்நாட்டுக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தது. 2020 ஆம் ஆண்டில் அதே தலிபானுடன் உடன்பாட்டிற்கு அமெரிக்கப் படைகள் ஒப்புக் கொண்டன. ஆகஸ்டு 2021இல் படைகள் வெளியேறத் தொடங்கின.  படைகள் வெளியேறுவதற்கு சரியான திட்டமிடல் எதுவும் இல்லை. சில நாட்களிலேயே சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.  பறக்கத் தயாரான விமானங்களில் தொங்கிய் சிலர், விமானம் மேலே சென்ற பிறகு கீழே விழுந்து இறந்தனர். ஆகஸ்டு 26 ஆம் தேதி நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்களும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 170 பேரும் கொல்லப்பட்டார்கள். இந்தக் குழப்பமான நிலைக்கு டொனால்டு டிரம்ப் எடுத்த முடிவுதான் காரணம் என்று ஜோ பைடன் நிர்வாகம் உருவாக்கியுள்ள 12 பக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ள முக்கியமான அம்சங்கள் பொது மக்கள் கவனத்திற்கு அதிகாரப்பூர்வமாகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்துக் கருத்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தவறான தகவல்களைத் தெரிவித்து விளையாடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

உலகச் செய்திகள்

சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கின் புதிய சகாப்தத்திற்கான சீனத் தன்மைகளுடனான சோசலிசம் குறித்த சிந்தனைகள் நூல் வடிவில் வெளியாகியுள்ளது. அவரது சிந்தனைகளை நடைமுறைப்படுத்த உதவும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் இது குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டன. நவம்பர் 2012 முதல் மார்ச் 2023 வரையில் ஜீ ஜின்பிங்கின் உரைகள், அறிக்கைகள், விளக்கங்கள், கட்டுரைகள் மற்றும் குறிப்புகள் உள்ளிட்டவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

லெபனானின் தென்பகுதி மற்றும் பாலஸ்தீனத்தின் காசாத் திட்டுப் பகுதிகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் ராணுவம் நுழைந்ததால், பாலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை ஏவின. பதிலுக்கு அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.

வடகொரியா மீதான தனது தடைகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் போர்ப் பயிற்சி அந்தப் பகுதிகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா அறிவித்திருக்கிறது. இந்நிலையில், எந்தவித ஏற்றுமதியும் வடகொரியாவுக்கு அனுமதியில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு தடைகள் நீட்டிக்கப்படுகின்றன.