திண்டுக்கல், அக்.4- பழனியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பாஜக பிரமுகர் மீது பாதிக்கப் பட்ட மக்கள் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பழனி சாமிநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் புஸ்பத்தூரைச் சே ர்ந்தவர்கள் செல்லத்துரை-நாயகம் தம்பதியினர். இவர் கள் தாழையூத்தில் ஐஸ்வரி யலட்சுமி ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தை நம்பி இப்பகுதியில் உள்ள மில் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் என சகல தரப்பினரும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் போட்டனர். இந்நிதிநிறுவனம் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் மேல் ஏலச்சீட்டு நடத்தி செல்லத் துரையும், அவரது மனைவி நாயகமும் மோசடி செய்து ள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் சீட்டுப் பணத்தை எடுத்து செல்லத் துரை தனது மனைவி நாய கம் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக கூறப் டுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 13 பேர் பழனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தொடர் வலியுறுத்தல் இருந்தும் காவல்துறையினர் நட வடிக்கை எடுக்கவில்லை. ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த செல்லத்துரை பாஜக வில் செல்வாக்கு மிக்கவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் கூறப்படு கிறது. இதனையடுத்து பாதிக்கப் பட்ட 13 பேர் புதனன்று திண்டுக்கல் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுக் கொடுத்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருவதாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களு டன், சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.பிரபாகரன், பழனி பகுதி சிஐடியு தலை வர் பிச்சைமுத்து, சிபிஎம் திண்டுக்கல் நகரச் செயலா ளர் அரபுமுகமது ஆகியோர் உடன் சென்றனர்.