states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் விபத்து!

‘வந்தே பாரத்’ ரயில் இயக்கத்தை கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இயக்கப்பட்ட முதல் நாளே இந்த ரயில் மீது எருமை மாடு மோதியது. அதற்கடுத்த  இரண்டாவது நாள் பசு மாடு மோதியது. இதில் வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி சேதமடைந்தது. அப்போது, எருமை மாடு மோதுவதை கூட இந்த ரயிலால் தாங்க முடியவில்லை என பலரும் கேலி  செய்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்றும் ‘மாடு மோதி’ வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வந்தே பாரத் ரயில், குஜராத்தில் அதுல் ரயில் நிலையம் அருகே சனிக்கிழ மையன்று காலை 8.15 மணியளவில் வந்தபோது மாடுகள் மீது மோதியது. இதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. உடனடியாக அதிகாரிகள் வந்து சேதமடைந்த பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ரயில் இயங்கியது. இந்த முறை விபத்தில் மாடு காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கழுதை சவாரி மூலமான வருவாய் ரூ.101 கோடி

கேதார்நாத் புனித யாத்திரையில் கழுதை சவாரி சேவை மீண்டும் முதலிடத்தைப் பிடித்தி ருக்கிறது. இந்த ஆண்டு 15.61 லட்சம் பேர் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்துள்ள நிலையில் 5.3 லட்சம் பேர் கழுதை சவாரி மூலம் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன்மூலம் கழுதை களின் உரிமையாளர்களுக்கு ரூ.101.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஹெலிகாப்டர் நிறு வனங்களுக்கு ரூ.80 கோடி மட்டுமே வருவாய் கிடைத்திருக்கிறது. கோவேறு கழுதை சேவை, ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி மூலம் அரசுக்கு ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.630 கோடி: குஜராத் அரசு தாராளம்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குஜராத் மாநில பாஜக அரசு சலுகைகளை அள்ளி வீசி வருகிறது. அண்மையில் இயற்கை எரிவாயுவுக்கான வாட் வரியை குறைத்தது டன், ஆண்டுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறி வித்தது. இதற்கு அடுத்ததாக தற்போது தென்மேற்கு பருவமழையின் போது குஜராத்தில் சாகுபடி பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 630 கோடியே 34 லட்சம் நிவா ரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் அதிக பட்சமாக 2 ஹெக்டேருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ராமர் கோயிலுக்கு வந்த பெண்ணிடம் பணம் பாஸ்போர்ட் திருட்டு

ஸ்ரீராம ஜென்மபூமியை பார்வையிட வந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் 600 டாலர் பணம் அயோத்திக்கு திருடு போயிருக்கிறது. அந்தப் பெண், தனது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை தனியார் லாக்கரில் வைத்திருந்தார். தற்போது திருடு போன நிலையில், லாக்கர் நடத்துபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த அந்தப் பெண் ராம்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தில்லியில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு

தில்லியில், ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வுக்கு அங்குள்ள ஆம் ஆத்மி அரசு அனுமதி  அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 ரூபாயும், ஏசி மற்றும் ஏசி அல்லாத டாக்சி கட்டணம் முறையே ரூபாய் 4 மற்றும் ரூபாய் 3 என்றும் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பின் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 25-ல் இருந்து ரூ. 30 ஆக உயரவுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 9.50-இல்  இருந்து ரூ. 11 ஆக உயர்கிறது. இதேபோல ஏசி அல்லாத வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம் ரூ. 14-இல் இருந்து ரூ. 17 ஆகவும், ஏசி வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 16-இல் இருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

2022 அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும்,  ஆனால், அதற்கு உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இயக்கு நரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சர்க்கரை  ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு அடுத்த ஆண்டு- அதாவது 2023 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்  படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் அக்டோபர் 28 தேதியில் வெளியிட்ட அறிவிப்பில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது.

காங்கிரசுக்கே திரும்பி வந்த மகேந்திரசிங் வகேலா

கடந்த 2012 முதல் 2017 வரை பயாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ-வாக இருந்த வர் மகேந்திர சிங் (58). முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலாவின் மகனான இவர், 2018 ஜூலையில் பாஜக-வில் இணைந்தார். எனினும் அடுத்த 3 மாதங்களில் அவர் பாஜக-விலிருந்து விலகினார். பின்னர் எந்தக் கட்சியிலும் சேராமலும் இருந்து வந்தார். இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மகேந்திர சிங் மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பியுள்ளார். பாஜக முன்னாள் எம்எல்ஏ பால்கிருஷ்ணா படேலும் கடந்த 24-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவின் இனிப்புகள்  ரூ.116 கோடிக்கு  விற்பனை

சென்னை,அக்.29- ஆவின் நிறுவனம் ஏற்கெனவே உள்ள பால், இனிப்பு பொருட்களுடன் இந்த ஆண்டு 9 புதிய  இனிப்பு வகைகள் புதிதாக தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்தது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை இனிப்புகள் விற் பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும், தீபாவளி பண்டிகையை யொட்டி ஆவினில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனையாகி உள்ளது. ஆனால், இது கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு  தீபாவளியின்போது ரூ.85 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது.

முதலமைச்சர்  மதுரை பயணம் ரத்து

சென்னை, அக்.29- முத்துராமலிங்க தேவரின் 115-வது குரு பூஜை மற்றும் பிறந்த நாள் விழா வையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் கிராமத்திற்கு அக்.30 அன்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக இரு ந்தது. இந்த நிலையில், முதுகு வலி ஏற்பட்ட தால் அக்.29 அன்று தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பினார். இந்த வலிக் காரணமாக, நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அக்.30 அன்று பசும் பொன்னில் நடைபெறும் முத்துராம லிங்க தேவரின் 115-வது  பிறந்த நாள் மற்றும் குரு பூஜையில் முதல மைச்சரின் சார்பில் மூத்த அமைச்சர் கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள் என்று அரசு சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை மார்பக பரிசோதனை அவசியம்

வேலூர், அக்.29- “ 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 6 மாதம் அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை யாவது மார்பக பரிசோதனை செய் துக்கொள்ள வேண்டும்” என்று வேலூர் மருத்துவக்கல்லூரி முதல்வர்  செல்வி  கேட்டுக்கொண்டுள்ளார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்  துவமனையில் உலக மார்பக புற்று நோய் மாதம் நிகழ்ச்சி ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு விழிப்பு ணர்வு பதாகை ஏந்திய முழக்கங்கள், ஊர்வலம், விழிப்புணர்வு கவிதை, நாடகம், கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி கள் நடந்தன. இறுதி நாள் நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய செல்வி, மார்பகங்களில் வலி, கட்டி, நிறம் மாறுதல், அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ, தயங்க வோ தேவையில்லை. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். முற்றிய நிலையில் இருந்தால் குணப்ப டுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார். நவீன கருவிகளின் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் மார்பக புற்றுநோயை நுண் கதிர்வீச்சு, கீமோ தெரபி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றாமலேயே புற்று நோய் கட்டியை அகற்றலாம். பொது மக்கள் அனைவரும் இதை பயன் படுத்திக் கொண்டு மார்பக புற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரி வித்தார்.

ரூபாய் நோட்டுகளில் கடவுள் படம்:   கெஜ்ரிவால் மீது கி.வீரமணி குற்றச்சாட்டு

சென்னை,அக்.29- குஜராத் தேர்தலுக்காக ரூபாய் நோட்டுகளில் கடவுள்களை அச்சிட சொல்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மீது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. இதை மேம்படுத்த, கடவுள்களின் ஆசி நமக்குத் தேவை. தற்போது ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவம் உள்ளது. இதைத் தவிர லட்சுமி, விநாயகரின் உருவங்களும் ரூபாய் நோட்டில் இடம் பெறவேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், தலை வரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி யுள்ளார். கடவுள் படம் போட்டால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து  விடுமாம். இந்தப் போக்கு அரச மைப்புச் சட்டத்தின் மாண்புகளை, தத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பதாகும்.  லட்சுமி விலாஸ் பேங்க் ஏன் காலாவதியானது. லட்சுமி பேரில் உள்ள வங்கியின் கதை ஏன் இப்படி முடிந்தது என் பதை அவர் அறியாதவரா? பின் ஏன் இப்படி ஒரு திடீர் பக்தி வேஷம் என்றால், அதுவும் தேர்தல் வித்தை தான். இந்துத்துவா வாக்கு வங்கி யை வசீகரித்து இழுப்பதற்கு பாஜ கவைவிட ஒருபடி மேலே போய் குஜராத் தேர்தலையே குறியாக வைத்து இப்படி ஒரு துருப்புச் சீட்டை இறக்கியிருக்கிறார். முதலில் ஊழல் ஒழிப்பு என்று வேஷம் கட்டி இறங்கினார். இது அவரதுபக்தி வேஷம். தேர்தல் வெற்றிக்கான உத்தி. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.