states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சபரிமலை சென்ற வேன் விபத்து : 13 பேர் காயம்

இடுக்கி, ஜன.11- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெருவந்தா னத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் வேன் ஒன்றில் சபரிமலைக்குச் சென்ற 13 பேர் காயமடைந்த னர்.  இந்த வேன் பெருவந்தா னத்தில் ஒரு வளைவில் திரும் பும் போது  விபத்திற்குள்ளா னது. இதனால் முண்ட காயம்-குட்டிக்கானம் சாலை யில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதியினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காய மடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் என பெருவந்தானம் காவல்துறையினர் தெரி வித்தனர்.

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

மாநில அரசு தலையிட்டு தீர்வுகாண சிஐடியு வலியுறுத்தல்

சென்னை,ஜன.11- தேனி மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையில்  மாநில அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, சுப்புலா புரம், ஜக்கம்பட்டி பகுதிகளில் பாரம்பரியமான விசைத்தறி தொழிலில் 3 ஆயிரம் குடும்பங்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் சேலை ரகங்கள் நாடு முழுவதும் அனுப்புகிறார்கள். இந்த சேலை ரகங்கள் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற காட்டன் ரக சேலைகளாகும். தறிக்கூடங்களுக்கு வருகை தந்து தனியார் உரிமையாளர்கள் சேலைகளை கொள்முதல் செய்கிறார்கள். சேலைக்கு நல்ல வரவேற்பு இருந்தும், விற்பனை மந்தம் என்று உண்மைக்கு மாறாக உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள் கடந்த 50 ஆண்டு காலமாக தொழிலா ளர்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு கிடைத்து வந்தது. தற்போது 2019 ஆம் ஆண்டு முதல் 4 வருடமாக கூலி உயர்வு இல்லை. 2021 இல் 45 நாள் போராட்டத்திற்கு பின்பு பெரியகுளம் வட்டாட்சியர் முன்பு உடன்பாடு ஏற்பட்டது. 13 சதம் மற்றும் 10 சதம்  உயர்வு என்ற முறையில் ஏற்பட்ட உடன்பாட்டை ஒருவாரம் கொடுத்துவிட்டு பின்பு மறுத்து விட்டனர். தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு,  கல்வி கட்டணம், வீட்டுவாடகை என தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.  கூலி உயர்வு குறித்து கடிதம் கொடுத்தும் உரி மையாளர்கள் பிரச்சனையின் மீது எந்தவித தீர்வும் காணவில்லை. எனவே, 02.01.2023 முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். வட்டாட்சியர் மற்றும் திண்டுக்கல் தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேலை நிறுத்தம் தொடர்கிறது. தேனி மாவட்ட ஆட்சியர் முன்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்க ப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசும், தொழிலாளர் துறையும் இதில் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது!

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர்  நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் ஆர் ஆர் ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலை யில் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு, ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி இந்த விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அதிமுக வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு  அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள்? என எடப்பாடி தரப்பிடம் கேள்வி  எழுப்பினர். அதிமுக விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களில் இருந்தால் கட்சியை எப்படி நிர்வ கிப்பீர்கள்? என்றும் கேட்டது. மேலும், இவ்வழக்கில் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ மான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ஆளுநரின் செயலுக்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

“ஆளுநர் பதவி என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு உரியதாகும். ஆளுநராக நிய மிக்கப்பட்டதுமே, தான் எந்த கட்சியையும் சார்ந்தவரல்ல என்பதை அவர் மனதில் கொள்ள வேண்டும். அதேபோல், தான் அங்கம் வகித்த கட்சியின் கொள்கையையும் அவரால் நிலைநிறுத்த முடியாது. நடுநிலையுடன் செயல்படுவதே ஆளுநரின் அரசமைப்புச் சட்டப் பணியாகும். மாநிலத்தின் பாதுகாவலர்களாக ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பேரவையில் நடந்துகொண்ட விதம், அவர் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவிக்கும் தகுதிக்கும் ஏற்புடையதல்ல!” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தேசிய செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ தெரிவித்துள்ளார்.

ராணுவ வாகன விபத்தில் மூவர் பலி

ஜம்மு - காஷ்மீர் குப்  வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இள நிலை அதிகாரி உள்பட 3 ராணுவ வீரர்கள் செவ் வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். மாலை 6.30 மணியளவில் வாக னம் பனி மூடிய பாதை யில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார் ஹவில் தார் அம்ரித் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகிய 3 பேரும் இறந்த தாகவும் அவரது உடல்  கள் மீட்கப்பட்டுள்ள தாகவும் ராணுவம் தக வல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் வாக்குறுதி!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 200 யூனிட் மின்  சாரம் இலவசமாக வழங்கப் படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.  “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிற் கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேர்தலின் முதல் வாக்குறுதி யாக இதனை தெரிவிக்கி றோம். பாஜக அரசு 10 மணி நேரத்துக்கு இலவச மும்  முனை மின்சாரம் வழங்குவ தாக அறிவித்தது. ஆனால் அத னை செய்ததா?. கடந்த முறை  நாங்கள் ஆட்சியில் இருந்த போது 7 மணிநேரத்துக்கு இல வச மின்சாரம் வழங்கினோம்” என்று காங்கிரஸ் தலைவர்  டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பேரவை நிகழ்ச்சிகளை செல்போனில்  பதிவு செய்தது உரிமை மீறல்

சென்னை, ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஜன.11) கேள்வி நேரத்திற்கு பேசிய மன்னார்குடி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஒரு உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார். அப்போது, கடந்த 9 ஆம் தேதி  ஆளுநர் பேரவையில் உரை யாற்றும் போதும், உரையாற்றி முடித்த பிறகும் நடந்த நிகழ்வு கள் அனைத்தும் அவை உறுப்பி னர்கள் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் தங்களால் அனுமதிக்கப் பட்ட புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே பேரவை நிகழ்வுகளை பதிவு செய்ய  முடியும். சட்டமன்ற பேரவை விதி 87-ன்கீழ் சட்டமன்ற உறுப்பினர்களின் கைபேசியை பேரவைக்குள் கொண்டு வரக்கூடாது என்ற நிலை யில் பார்வையாளர்கள், அன்னி யர்கள் செல்பேசியை பேரவைக்கு எடுத்து வர அனுமதிக்கமாட்டார்கள். அதே போல் பேரவை நடவடிக்கை களை எவரும் ஒளிப்பதிவு செய்ய முடியாது. இந்த நிலையில் அன்றைய தினம் ஆளுநர் உரை நடந்த போது சட்டப்பேரவையின் விருந்தினர் மாடத்தில் அமர்ந்து இருந்த ஆளுநரின் விருந்தினரான ஒருவர் தனது கைபேசி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அதுபற்றி தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தோம். பேரவை காவலாளியிடம் தெரிவித் தேன். பேரவை நிகழ்ச்சியை படம் பிடித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து பேரவைத்  தலைவர் மு.அப்பாவு, “இந்த  பிரச்சனையை  மேலெழுந்தவாரி யாக பார்த்தால் அதில் உரிமை மீறல்  இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தை பேரவையின் உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினார்.

எடப்பாடி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை, ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஜன.11) கேள்வி நேரம் முடிந்ததும், சட்டம் ஒழுங்கு  குறித்து எதிர்க் கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பொத்தம் பொதுவாக  குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது குறுக்கிட்ட முதல மைச்சர், “ஆதாரத்துடன் ஏதாவது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினால் அதற்கு விளக்கம் அளிப்பதாக”  தெரிவித்தார். நேரமில்லாத நேரத்தில் பேசும் போது, மாநிலத்தில் நிகழ்ந்த அசாதா ரனமான நிகழ்வுகள் அல்லது முக்கிய மான பிரச்சனை இருந்தால் அதை முன்கூட்டியே தன்னிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றுதான் பேச வேண்டும். ஆனால், எதிர் கட்சித் தலைவர் குறிப்பிடும் பிரச்ச னையில் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இருவரும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத் தில் வழக்கு உள்ளது என்றார். இருந்தாலும் எடப்பாடியை முழுமையாக பேச அனுமதித்தார். அவர் பேசி முடித்ததும் முதல மைச்சர் பதில் அளிக்க முற்பட்டார்.  அப்போது எடப்பாடி தலைமையி லான அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கருப்பு சட்டை ஈபிஎஸ் :  வெள்ளை சட்டை ஓபிஎஸ்...!

சென்னை, ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நாள் பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. ஜன.11 அன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அதேநேரத்தில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு உறுப்பினர்கள் வழக்கம்போல் வெள்ளை சட்டையில் வந்தனர்.

761 மில்லியன் டாலர் உபரி பொலிவியா அபாரம்

லா பாஸ், ஜன.11- திட்டமிட்ட ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகளின் உதவியோடு செயல்பட்டு 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலா வணியில் 761 மில்லியன்(1 மில்லியன் = 10 இலட்சம்) அமெரிக்க டாலரை உபரியாக பொலிவியா ஈட்டியுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் இவோ மொரேல்ஸ் ஜனாதிபதியாக இருந்தபோது இடதுசாரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பல்வேறு நலப்பணிகள் செயல்படுத்தப் பட்டன. மக்களின் வாங்கும் சக்தியை அதி கரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தினார்கள். அவருக்குப் பிறகு, லூயிஸ் அர்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப் பேற்ற பிறகு, வலுவான அடித்தளத்தில் இருந்து ஏற்றுமதி மீது கவனம் செலுத்தப்பட்டது. பொலிவியாவில் இருந்து தங்கம், தகரம், சோயா பீன்ஸ், சூரியகாந்திப்பூ, மரப்பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி ஆகின்றன. சர்வதேச அளவில் பல நாடுகளில் நெருக்கடி இருந்தபோதிலும் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் உபரியாக 761 மில்லியன் அமெரிக்க டாலரை பொலிவியா ஈட்டியிருக்கிறது. இந்த சாதனையை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம் என்று ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் செய்தி யாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மற்ற நாடுகளைப் போலவே பொலிவியாவும் கடும் பாதிப்பைச் சந்தித்தது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி, தங்கள்  பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தைக் காட்டுவதாக பொலிவியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் பெஞ்சமின் பிளாங்கோ தெரிவித்துள்ளார். உற்பத்தி யாளர்களின் நம்பிக்கையும் பெரும் அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமன்ற துளிகள்....

 

“நான் ஓடிவிட மாட்டேன்”:  முதல்வர்!

கேள்வி நேரம் முடிந்ததும், நேர மில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது” என்று ஆரம்பித்து, பெண் காவலர் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இப்படி அவர் பேசக்கூடாது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பேச வேண்டும். அனுமதி பெறாத விசயங்களைப் பற்றிப் பேசு வது மரபு அல்ல. சட்டம் ஒழுங்கு குறித் துப் பேசினால், அதிமுக ஆட்சியில்  சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை கள் குறித்தும் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தப்பட்டியலை வெளியிட எங்களையும் அனுமதிக்க  வேண்டும். அவரைப் பேச அனுமதி யுங்கள். நான் ஓடப்போவதில்லை; அவரைப் பேச அனுமதியுங்கள்” என்று பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆளுநர் உரைக்கு முதன் முறையாக வருத்தம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 9 அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி  உரையுடன் தொடங்கியது. இதில்  அரசு தயாரித்த உரையை ஆளுநர்  முறையாக முழுமையாக படிக்க வில்லை. மேலும் இது தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (ஜன.11) தொடங்கி யது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து  பேசிய திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் “தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு, ஆளுநரால் இசை வளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப் பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறது என்றார்.  ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியும் போது வருத்தம் தெரிவிப்பது தமிழ்நாடு சட்டப் பேரவையில் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

மாற்றுத் தலைவர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜன.9  அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி யது. இந்த கூட்டத் தொடருக்கான மாற்றுத் தலைவர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறி வித்தார். அதன்படி, க.அன்பழன், ந. ராமகிருஷ்ணன், எஸ்.ஆர். ராஜா, க. உதயசூரியன், துரை. சந்திரசேகர், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பேரவை யின் மாற்றுத் தலைவர்களாக செயல் படுவர்.

இரங்கல் குறிப்பு'

தமிழ்நாடு சட்டப்பேரவை புதனன்று (ஜன.11) காலை 10  மணிக்கு கூடியதும், சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் து. புருஷோத்தமன் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் சில மணித்துளிகள் அஞ்சலி செலுத்தினர்.